Wednesday 20 March 2019

விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- எல் .ஐ.சி.சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.






                          ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சிவகாளிமுத்து  மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி பேசினார் .கிளையின் வளர்ச்சி அதிகாரிகள் முத்துக்குமரன்,திருவேங்கடம்,காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாணவர்கள் அட்சயா,மோகன்தாஸ்,பாலமுருகன்,அனுசுயா நதியா,கீர்த்தியா,சிரேகா,மாதரசி   ஆகியோருக்கு  விருதுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.ஆசிரியை  முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் :  எல் .ஐ.சி.சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சிவகாளிமுத்து  மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


No comments:

Post a Comment