Thursday 14 March 2019

தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்

அஞ்சல் அட்டை மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் 

ஓட்டுப்போடும் வரை பெற்றோரை தூங்கவிடாதீர்கள்

கோட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை










தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
                                                            இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.தேர்தலில்  100 சதவிகித  வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தங்கள் பெற்றோருக்கும்,அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்.

                 அதில் "விலை மதிப்பில்லா வாக்கினை மறவாதீர் ,அனைவரும்

100% வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துங்கள் " தேர்தல் நாள் ஏப்ரல்  -18 என்ற வாசகத்தை அட்டையில் எழுதி  வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி பள்ளிக்கு வந்து மாணவர்களின் விழிப்புணர்வு உத்தியைப் பார்வையிட்டு வாழ்த்தினர்.அப்போது அவர் பேசுகையில்,மாணவர்கள் அனைவரும் உங்களின் பெற்றோரிடம் அன்பாக பேசி அவர்களை ஓட்டுப்போடும் வரை தூங்கவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.
                          

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அஞ்சலட்டை மூலம் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்பினர் .தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment