Wednesday 6 June 2018

மூளை வளர்ச்சி குறைவில்லாத குழந்தை பிறக்க 
நிச்சயதார்த்த மாத்திரை சாப்பிடுங்கள் 

ஆண்களும் தன்சுத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் 

டீ ,காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

மருத்தவ கருத்தரங்கில் தகவல் 





தேவகோட்டை - பள்ளி மாணவிகள் டீ ,காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவ கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
                            தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் 6,7,8ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.பள்ளி ஆசிரியை செல்வமீனாள் அனைவரையும் வரவேற்றார்.கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.திருவேகம்பத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார  நிலைய மூத்த செவிலியர் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார்.திருவேகம்பத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார  நிலைய பொது மருத்துவர் எழில் பெண்களின் உடல் நல பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்து பேசுகையில்,மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை மிட்டாய்,பொறி உருண்டை ,பழங்கள்,கீரை வகைகள்,காய்கறிகளை சாப்பிட வேண்டும்.மாணவிகள் தங்களின் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக பால்,தயிர்,மோர் சாப்பிட வேண்டும்.டீ ,காபி அதிகம் குடிக்க கூடாதுஎன்றார்.நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசு மருத்துவர் எழில் ,செவிலியர் கண்ணம்மாள் ஆகியோர் மாணவிகளுக்கு தொற்றா நோய் குறித்து விளக்கினார்.




 
மேலும் விரிவாக :
 *மூளை வளர்ச்சி குறைவில்லாத குழந்தை பிறக்க தமிழக அரசு மருத்துவ மனைகளில் வழங்கும் 
நிச்சயதார்த்த மாத்திரை சாப்பிடுங்கள் 

*மாதவிடாய் ஒரு நோயல்ல - இயற்கையானது 


 *கோழி இறகை கொண்டு காது குடையாதீர்கள்
 *தீட்டு என்று மூலையில் தள்ளி வைப்பது தவறு 
 *மாத விடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
  *பிராய்லர் கறி  கோழி உண்பதால்  பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
 
*மருத்தவ கருத்தரங்கில் தகவல்

*தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு
 
 
                       முகாமில் பள்ளி வயது மாணவிகள் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம்,அந்த மூன்று நாட்கள் தொடர்பான விளக்கங்கள்,மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்,மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை போக்கவும்,மாணவிகளின் அம்மாக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும் இந்த ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                          பொதுவாக நாம் மருத்துவரை சென்று பார்த்தால் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இயலும்.அதற்குள் நமக்கு சீட்டை எழுதி கொடுத்து விடுவார்கள்.மீண்டும் சந்தேகம் கேட்கலாம் என எண்ணி சென்றோமானால் அவ்வளவு எளிதாக நாம் மருத்துவரை பார்க்கமுடியாது.ஆனால் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாணவிகள்,அவர்களின் அம்மாக்கள் ,பெண் ஆசிரியைகள் ஆகியோர் விளக்கமாக இந்த நிகழ்வில் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள பள்ளியின் வழியாக தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து  நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்டு சந்தேகங்களை விளக்கி சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இந்த பணியை செய்து உதவி வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியது ஆகும்.
 
நிச்சயதார்த்த மாத்திரை ;
                                                    தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வழியாக இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் உள்ள மாத்திரைகள் இலவசமாக 100 நாட்களில் இருந்து 300 நாட்கள் வரை வழங்கப்படுகிறது.ஒருவருக்கு திருமணம் நிச்சயம் ஆன உடன் இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் திருமணம் முடிந்து குழந்தை பிறப்பது எளிது.இந்த மாத்திரைகளில் குழந்தை மூளை வளர்ச்சியுடனும்,நரம்பு தளர்ச்சி இல்லாமலும் பிறப்பதற்கு உள்ள சத்துக்கள் அடங்கியது.இதனை அனைவரிடமும் சொல்லி அரசு மருத்துவமனைகளில் வந்து இலவசமாக பெற்று கொள்ள சொல்லுங்கள்.


 மாத விடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
                              பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும்,மனதும் வேறுபட்டு காணப்படும்.பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறர் நம்மை தொடுவதில் நல்ல தொடுதல்,கேட்ட தொடுதல் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.உறவினர்கள் யாரேனும் தவறான தொடுதல் செய்தால் அதனை ஆசிரியரிடமோ அல்லது அம்மாவிடமோ அவசியம் சொல்ல வேண்டும்.பெண்கள் பருவமடையும்போது சில உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும்.உடலில் சில இடங்களில் உரோமங்கள் அதிகமாகும்.இவற்றை கண்டு பயம் வேண்டாம்.இது தானாக இயற்கையில் வளர்ச்சி அடையும்போது நடைபெறுபவை ஆகும்.இதற்காக பயம் வேண்டாம்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தேவையில்லாத சிந்தனைகள் ,தலைவலி வரலாம்.யாரை பார்த்தாலும் கோபம் கூட சமயங்களில் அதிகமாக வரலாம்.கெட்ட எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது போன்ற சமயங்களில் தண்ணீர் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் நலம் ஓரளவு உங்கள் கட்டுக்குள் வரும்.தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம்.

 பிராய்லர் கறி  கோழி உண்பதால்  பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
                              

         பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம்.அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது.மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர்.மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை.அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.மிக குறைந்த வயதில் கர்ப்பப் பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.எனவே மாணவிகளான நீங்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.இரும்பு சத்துள்ள முருங்கை கீரை ,உளுந்த கஞ்சி,மாதுளம் பழம் ,எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்ய பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டு கொள்ள வேண்டாம்.அவ்வாறு சண்டையிட்டு கொள்வதால் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவது,கை சூப்புவது போன்ற பழக்கங்கள் ஏற்படுகிறது.இது நாளடைவில் தீவிரமடைந்து பல்வேறு பிரச்சினைகளை உண்டு செய்கிறது.எனவே பெற்றோர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் குழந்தைகள் முன்பு சண்டை போடவேண்டாம்.இவ்வாறு மருத்துவர் சிவசங்கரி  மாணவிகளிடமும்,பெற்றோர்களிடமும் பேசினார்கள்.

   படர் தாமரை நோய் வர காரணம் என்ன ?
                                                 மருத்துவர்கள் மாணவர்களிடம் பேசும்போது , தினமும் நன்றாக குளிக்க வேண்டும்.பல் தேய்க்க வேண்டும்.எந்த ஒரு செயல் செய்தாலும் 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது உங்கள் பழக்கமாகி விடும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்க கூடாது.அதனால் பல்வேறு வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.கிருமி தொற்று ஏற்படும்.எனவே சிறுநீர் வந்தால் உடனே சென்று விடவேண்டும்.வீட்டில் ஒரே சோப்பு,ஒரே துண்டு என அனைவருக்கும் ஒன்று என்று பயன்படுத்த கூடாது.ஒரே துண்டு பயன்படுத்துவதால் படர் தாமரை என்ற பூஞ்சை அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.அனைத்து துணிகளையும் நன்றாக துவைத்து வெயிலில் காயப்போட்டு பயன்படுத்த வேண்டும்.கையில் சில பேருக்கு பொறி  பொறியாக வருவதற்கு காரணம் மண்ணில் விளையாடுதல் மற்றும் தண்ணீர் சரியாக குடிக்காமல் இருந்தால் அவ்வாறு வரும்.புற்று நோய் அப்பாவுக்கு இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.நகங்களை குறிப்பிட்ட கால அளவுக்குள் வெட்டி விடவேண்டும்.நகங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.மலம் கழித்த பின்பும்,சிறுநீர் இருந்த பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.கால்களுக்கு செருப்பு கண்டிப்பாக போட வேண்டும்.அப்போதுதான் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து  கொள்ள முடியும்.
 
தீட்டு என்று மூலையில் தள்ளி வைப்பது தவறு
 
 பொதுவாகவே காய்கறி ,பேரிச்சம்பழம் ,பால் போன்றவை தினசரி உணவில் சாப்பிட வேண்டும் என்றார்.இரத்த கொதிப்பு,சர்க்கரை போன்றவை முப்பது வயதில் வந்து விடுகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக 30 வயதிலியே அவசியம் பரிசோதிக்க வேண்டும்.பள்ளி வயது பெண்குழந்தைகள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.மாதவிடாய் காலத்தில்  தன சுத்தம் பேணுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக படங்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்களின் மாதவிடாய் காலங்களில் சில வீடுகளில்  வீட்டிலிருந்து வீட்டின் வெளியே ஒரு மூளையில் தள்ளி வைப்பது நடைபெறுவதை ஊடகங்களின் வழியாக அறிந்ததாகவும்,அது தவறான நடைமுறை என்றும் அதற்கான விளக்கங்களை கூறினார்.மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறுவது என்றும்,இதற்காக வீட்டிலிருந்து தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.இரத்தபோக்கு  தொடர்ந்து 6நாட்களுக்கு மேல் இருந்தால் உடன் மருத்துவரை அணுகுமாறும் அறிவுரை வழங்கினார்.
 
அசைவ உணவை தவிர்க்கவும் :
                                                              அசைவ உணவை உண்ணுதலைப் பெரும்பாலும் தவிர்த்தல் நல்லது.எந்த உணவையும் அதிகமாக எண்ணெயில் பொரித்து உண்ணுதல் கூடாது.மீன் உணவு நல்லது.முட்டையில் மஞ்சள் கருவை 30 வயது முதல் தவிர்த்தல் நல்லது.
 


No comments:

Post a Comment