Thursday 21 June 2018

கடல் ஆமைகள் நீண்ட காலம் உயிர் வாழ யோகவே காரணம் 

சார்பு ஆய்வாளர் பேச்சு 

உலக யோகா தினம் 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
                                              யோகா தின விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் துறை  சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் மருது யோகா தினம் குறித்து மாணவர்களிடம் பேசும்போது , கடல் ஆமைகள் 300 ஆண்டுகள் உயிர் வாழ காரணம் ,ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே மூச்சை இழுத்து நிறுத்தி நிதானமாக வெளிவிடுமாம்.அதனாலதான் 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது.நாம் நொடிக்கு பல மூச்சுகளை வெளிவிடுகிறோம் .எனவே மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.ஆயுட்காலம் கூடும்.அது யோகவினால்தான் முடியும்.இவ்வாறு பேசினார்.மாணவர்களின் யோகா நிகழ்வும் நடைபெற்றது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் நிகழ்வில் தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் மருது யோகா குறித்து சிறப்புரையாற்றினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் உள்ளனர்.



மேலும் விரிவாக :
                        தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை சார்பு ஆய்வாளர் மருது சிறப்புரை ஆற்றி பேசுகையில் .

நான்கு உறுதிமொழிகள் ;

உலக யோகா தினத்தில் சிறு வயதுடைய நீங்கள் நான்கு உறுதிமொழிகளை எடுத்து கொள்ள வேண்டும்.அவை 

1) எந்த காலத்திலும் யார் பொருளுக்கும் ஆசை படுவதில்லை.

2) யோகா கற்றுக்கொண்டு கடல் ஆமைகள் போல் நீண்ட காலம் வாழலாம்.எனவே யோகா செய்வோம் என உறுதி மொழி எடுத்து கொள்வோம் .

3) லஞ்சம் தவிர்த்தல் வேண்டும்.

4) அரசு பள்ளிகளில் படிப்பதை அதிகமாக ஊக்கிவிக்க வேண்டும் .அதற்கு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் .

 1) எந்த காலத்திலும் யார் பொருளுக்கும் ஆசை படுவதில்லை.

 திருடர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் ?

                                                            சிறு வயதில் நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நாம் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து வரும்.பிறக்கும்போதே குழந்தை திருடனாக பிறப்பது கிடையாது.சில பெற்றோர் தெரிந்தோ,தெரியாமலோ அடுத்த வீட்டில் போய் அப்போதைய தேவைக்காக தம் குழந்தையை (3 ,4 வயதில் ) அடுத்தவர் பொருளை எடுத்து வர சொல்கிறார்கள்.சில பெற்றோர் எடுத்த வர சொல்வதாலேயே ,அது பழக்கமாகி சூழ்நிலையும் ,கட்டாயமும் வயது ஆக ,ஆக திருடும் பழக்கத்தை வளர்த்து விடுகிறது.இவ்வாறுதான் திருடர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

நல்லவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் ?
                                                   சில பெற்றோர் குழந்தை எடுத்து வந்தாலும் திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.அடுத்தவர் பொருள் நமக்கு தேவையில்லை என்று சொல்லக்கூடிய சுழலில் அந்தக் குழந்தை நல்ல பிள்ளையாக வளர வாய்ப்புள்ளது.

ஆசிரியர் சொவ்லதை கேளுங்கள் :
                                                               எனவே சிறு வயதிலேயே நல்லது எது/ கேட்டது எது? என ஆசிரியர் சொவ்லதை கேட்டு,தெரிந்து கொண்டு செயல்பட்டால் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரமுடியும்.நல்லதை மட்டுமே செய்வோம்.கேட்டதை செய்ய வேண்டாம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.

2) யோகா செய்வோம் என உறுதி மொழி எடுத்து கொள்வோம் :

 யோகா கற்றுக்கொண்டு கடல் ஆமைகள் போல் நீண்ட காலம் வாழலாம்.

                                             யோகா உயிர் வாழ்வதற்கு ,உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை தரவே யோகா செய்கிறோம்.கடல் ஆமைகள் 300 ஆண்டுகள் உயிர் வாழ காரணம் ,ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே மூச்சை இழுத்து நிறுத்தி நிதானமாக வெளிவிடுமாம்.அதனாலதான் 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது.நாம் நொடிக்கு பல மூச்சுகளை வெளிவிடுகிறோம் .எனவே மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.ஆயுட்காலம் கூடும்.அது யோகவினால்தான் முடியும்.எனவே தினசரி யோகா செய்வோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம்.

3)  லஞ்சம் தவிர்த்தல் வேண்டும்:
                                                 எந்த ஒரு வேலைக்கும் லஞ்சம் வாங்காமல் இருந்தால் யாருக்கும்,எந்த இடத்திலும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லலாம்.எனவே இந்த நாளில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி செயல்படுவோம் என உறுதி மொழி எடுத்து கொள்வோம்.

4) அரசு பள்ளிகளை ஊக்குவிப்போம் ;
                                      அரசு பள்ளியில் படிப்பதை தாங்கள் யாரும் தாழ்வாக என்ன வேண்டாம்.நான் என் கல்லூரி படிப்பு வரை அரசு பள்ளி,அரசு கல்லூரியில்தான் படித்தேன்.நான் இந்த பதவிக்கு வரகாரணமே அரசு பள்ளியில் படித்ததாலதான் .அரசு பள்ளிகளில் படித்தவர்கள் அதிகமாக உயர் பதவியில் உள்ளனர்.நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்துதான் உலகமே போற்றக்கூடிய வகையில் உயர்ந்தார்.வேலை வாய்ப்பை பெறுவதற்கு அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்.எனவே அரசு பள்ளிகளில் படிப்பதை அதிகமாக ஊக்கிவிக்க வேண்டும் .அதற்கு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் .
                         இவ்வாறு நான்கு உறுதி மொழிகளை சொல்லி சார்பு ஆய்வாளர் மருது பேசினார்.
             

No comments:

Post a Comment