Tuesday 6 March 2018

சத்துணவை சாப்பிட்டு பள்ளியை  பாராட்டிய வார இதழின் உதவி  பொறுப்பாசிரியர் 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு சமீபத்தில் விகடனின் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் வருகை தந்தார்கள்.அப்போது அவர் மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்தார்.மாணவர்களையே வைத்து ஒரு கதை சொல்லி அதனை நடிக்கவும் செய்து,அந்த கதை வழியாக என்ன அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டு அதன் கருத்தை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் அவர்களிடமிருந்தே கேட்டு விளங்க வைத்தார்.

 சத்துணவை சாப்பிட்டு விட்டு பள்ளியை  பாராட்டுதல் 

மதியம் சாப்பிடும் நேரம் வந்த உடன் மாணவர்களுடன் உட்கார்ந்து  ( மேஜையின் மீது அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதனை மறுத்து மாணவர்களுடன் உட்கார்ந்து ) தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் உள்ள உணவை சாப்பிட்டு அதனை பள்ளி சத்துணவு பதிவேட்டில் எழுதி பாராட்டவும் செய்தார் .மேலும் மதியம் மாணவர்களை கொண்டு விகடன் இதழுக்காக நாடகமும் படமாக்கப்பட்டது.அவரது வருகை மாணவர்களின் மனதில் மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து கொண்டது .

 நன்றிகள் பல 

சென்னையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து தேவகோட்டை வந்து மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி ,மாணவர்களை கொண்டு நாடகமும் எடுத்து சென்ற யுவராஜன் அவர்களுக்கும்,பொறுப்பாசிரியர் அவர்களுக்கும்,செய்தி ஆசிரியர் அவர்களுக்கும்,மாணவர்களை படம் பிடித்த புகைப்பட கலைஞர் சாய் தர்மராஜ் அவர்களுக்கும் ,விகடன் குழுமத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அரசு பள்ளி மாணவர்களின் படங்கள் இளம் வயதில் நாளிதழ்களில் வெளிவரும்போது அவர்கள் பல வருடங்கள் கழித்து அதனை பார்க்கும்போது அளவில்லாத மகிழ்ச்சிக்கு உள்ளாவார்கள்.அதனை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வரும் சுட்டி விகடன் குழுமத்திற்கு நன்றிகள் பல.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.






No comments:

Post a Comment