பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
மாணவிகளுடன் மாணவர்களும் பங்கேற்று கோலம் போட்டு அசத்தல்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ,சத்துணவு அமைப்பாளர் பொங்கல்
சமைத்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் .
பொங்கல் கோலம் ,விளையாட்டு, பேச்சு
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ மீனாள், ஆசிரியர் கருப்பையா ஆகியோர் செய்து
இருந்தார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்
சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று
சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவிகளுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=HVN6ZHPILo8
https://www.youtube.com/watch?v=6-LgYa4bTio
No comments:
Post a Comment