Thursday 12 January 2023

 பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 

மாணவிகளுடன் மாணவர்களும் பங்கேற்று  கோலம் போட்டு அசத்தல்







 

 

 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
  
                ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் ,சத்துணவு அமைப்பாளர்  பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் .
பொங்கல் கோலம் ,விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை
ஆசிரியை செல்வ மீனாள், ஆசிரியர் கருப்பையா ஆகியோர்  செய்து இருந்தார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்   நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவிகளுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினார்கள்.

 

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=HVN6ZHPILo8

 https://www.youtube.com/watch?v=6-LgYa4bTio

 

 

No comments:

Post a Comment