Monday 2 January 2023

   

ஸ்ரீசைலத்தில் கண்ணை கவரும் ஆக்டோபஸ் வியூ  

ஆளை மிரட்டும் அடர்ந்த காடுகளின் நடுவே ஜங்கிள் சபாரி 

ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராமானுஜர் சிலை 

பார்க்க வேண்டிய பழங்குடியினர் கண்காட்சியகம் 

ஹைதராபாத்தில் இரண்டாவது நாள் சுற்றுலா 

ஹிந்தி தெரிந்திருந்தால் தான் தமிழ்நாட்டை தாண்டி எங்கு சென்றாலும் பேச முடியும் 





















                        இரண்டாவது நாளின் காலையில் நாங்கள் காலையில் 4.30   கிளம்பி ஸ்ரீசைலம் செல்ல தயாரானோம். நாலரை மணிக்கு எங்களது பயணம் ஆரம்பமானது. வழிநெடுக கடுமையான பனி மூட்டம். ( எங்கள் அறைக்கு எங்கள் ஓட்டுநர் காலை 3.55 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.)

                                            பனி மூட்டத்திற்கு நடுவே வாகனத்தை இயக்குவதற்கு எங்களது ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார். தோராயமாக மிகவும் பொறுமையாக சில மணி நேரங்கள் பயணம் செய்தோம். காலை ஏழு மணிக்குப் பிறகுதான் ஓரளவு வெளிச்சம் தெரிந்தது.

                                         எட்டரை மணிக்கு டொமெல்பேண்ட்டா  என்கிற இடத்தில் காலை உணவை அறிந்து விட்டு இட்லி வடை பூரி தோசை மிகவும் நன்றாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி  செல்லும் வழியில் ஸ்ரீசைலம் டேமை பார்த்தோம்.மிகப்பெரிய இடமாக இருந்தது. மலை உச்சியின் வழியாக காடுகளின் வழியாக பயணித்தோம்.

                        ஸ்ரீசைலம் டேம் பகுதியில்  வியூ பாயிண்ட்  இருக்கின்றது. பரிசல்கள் செல்கின்றன. அவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பி எங்களுடைய பயணம் ஒன்பதரை மணிக்கெல்லாம் ஸ்ரீசைலத்தில் கோவிலை சென்று அடைந்தது.

                          ஸ்ரீசைலத்தில் ஊருக்கு உள்ளே செல்வதற்கு டோல்கேட் வசூல் செய்கிறார்கள்.ஊருக்குள் செல்வதற்கு டோல்கேட் வசூல் செய்யும் ஒரே இடம் அந்த ஊர்தான்.  ரூபாய் 100 வசூல் செய்து விடுகின்றார்கள்.

                     ஸ்ரீ சைலம் செல்லும் வழியில் ஆர்ம்பநாடு  என்கிற காடு மற்றும் மலைப் பகுதியின் வழியே நாம் செல்ல வேண்டியிருக்கிறது. மிகவும் அடர்ந்த காடு. டைகர்  ரிசர்வே என்று எங்களிடம் தெரிவித்தார்கள். சுமார் 30 கிலோ மீட்டருக்கு எங்கேயும் வாகனத்தை நிறுத்த கூடாது. அங்கே ஒரு பார்க்கிங் வேறு வைத்துள்ளனர். அதிலும் நாம் பணம் செலுத்திவிட்டு டிக்கெட் பெற்றுக் கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும்.

                             அந்த ரோட்டின் வழியாக நாம் பயணம் செய்தால் மிக நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு ஸ்ரீசைலம் அடைய முடியும். ஸ்ரீசைலத்தில் எங்கள் வாகன ஓட்டுனர் எங்களை இறக்கி விட்டு சென்றுவிட்டார். எந்த தெரு வழியாகச் சென்று கோயிலை அடைய வேண்டும் என்பதை எங்களால் யாரிடமும் கேட்க முடியவில்லை.

                                       ஏனென்றால் எங்களுக்கு ஹிந்தி தெரியாது.அவர்களுக்கு  தமிழ் தெரியவில்லை ஆங்கிலமும் தெரியவில்லை ஹிந்தியும் தெலுங்கும் எங்களுக்கு தெரியவில்லை இது போன்ற ஒரு சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து கோயிலை அடைந்தோம்.

                             அங்கு மிகப் பெரிய கூட்டம். மிகப் பெரிய கூட்டத்தைக் கடந்து சில மணிநேரங்கள் கழித்து இறைவனை தரிசனம் செய்து மீண்டும் அங்கிருந்து நாங்கள் கோயிலின் உள்ளே உள்ள அழகைக் கண்டு ரசித்தோம். சிவாஜிக்கு அவர்களது தாயார் கொடுத்த சில பொருள்கள் அது போன்று பல்வேறு விதமான தகவல்களை நாங்கள் அங்கே பார்த்து தெரிந்து கொண்டோம்.

                               கோயிலில் மிகப் பழமையான சிலைகள் காணப் பட்டது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீ சைலம்  கோயிலில் முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில் கேமரா போன் எதையும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. எனவே டூரிஸ்ட் பயணம் செய்பவர்கள் முதலிலேயே காரில் இவற்றை வைத்து விட்டு செல்வது நல்லது.

                                 ஏனென்றால் இவற்றை பாதுகாப்பதற்கு பத்து, பத்து ரூபாய் வசூல் செய்கிறார்கள். அதற்கு மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது .இந்த கூட்டங்களைக் கடந்து தான் நாம் அங்கே செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்..

                              எனவே வாகனத்திலேயே இவற்றை வைத்து விட்டுச் செல்வது நல்லது. மீண்டும் அங்கிருந்து நாங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ட்ரைபல்  மியூசியம் சென்று அடைந்தோம். ட்ரைபல்  மியூசியம் மிக அருமையாக அமைந்திருந்தது. 

                         பல்வேறு விதமான பழங்குடியினர் தொடர்பான தகவல்கள் அங்கிருந்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கேயே சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ராமானுஜர் சிலை இருக்கும் இடம் நோக்கி எங்களுடைய பயணம் ஆரம்பமானது.

                               செல்லும் வழியிலேயே அடர்ந்த காட்டுப் பகுதியின் வழியே இடையில் அக்கா மகாதேவி குகைகளை காணலாம் என முயற்சி செய்தோம் .ஆனால் ஸ்ரிசைலம் டம் அருகே வரும் பொழுது நாங்கள் இதுவரை கூகுள் மேப்பில் அடையாளம் கண்டு போனோம். 

                    அதற்குப் பிறகு வழி தெரியவில்லை . கேட்டபொழுது தற்பொழுது வாகனங்கள் இயக்கப்படவில்லை என்றும், போட் மூலம் செல்லலாம் என்றும் தெரிவித்தார்கள். அந்த குகைகள் இருக்கும் பகுதியில் மலைப்பிரதேசங்களில் தண்ணீர் ஊற்றும் இருப்பதாக அறிந்து கொண்டோம். ஆனால் தற்பொழுது போர்ட் இல்லை என்று சொல்லிவிட்டார்.

                              மீண்டும் அங்கிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாக வரும் பொழுது ஆக்டோபஸ் வியூபாயிண்ட் என்பதை பார்த்தோம் . ஆக்டோபஸ் வியூ பாயிண்ட்  உள்ளே செல்வதற்கு தலைக்கு 50 ரூபாய் பணம் வசூல் செய்கிறார்கள். 

                            ஆக்டோபஸ் வியூபாயிண்ட்   தவிர்க்க முடியாத மிக அருமையான ஒரு வியூ பாயின்ட் என்பது ஆக்டோபஸ் வடிவத்தில் இயற்கையாக அமைந்துள்ளது . பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருந்தது அங்கே சில மணி நேரங்கள் இருந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாக பயணம் செய்தோம் 

                             ஆக்டோபஸ் வியூபாயிண்ட் அருகே நமது வாகனம் செல்லும்  வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளார்கள்.  கொஞ்ச தூரம் தாண்டியவுடன் ஜங்குல் சபாரி என்று ஒரு போர்டு தொங்கியது.

                                   ஜங்கிள் சவாரி சென்று விசாரித்தோம். மூன்று வாகனங்கள் இருக்கின்றது. ஒரு வாகனத்திற்கு 6 பேர். ஒரு வாகனத்திற்கு 1200 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். நாங்கள் ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.

                                   மீண்டும் ஒரு மணி நேரம் திறந்த வெளி ஜீப்பில் பயணம் . அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே விலங்குகளை பார்க்க இயலும் என்று முன்பே தெரிவித்து விடுகிறார்கள். அடர்ந்த காடுகளின் வழியாக எங்களின் பயணம் துவங்கியது. 

                          பல்வேறு காடுகளையும் பார்த்துவிட்டு வழியில் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் பார்த்தோம். அங்கேயும் ஒரு வியூபாயிண்ட் வைத்திருக்கிறார்கள். அந்த வியூபாயிண்ட் வழியாகப் பார்த்தால் மிக அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் தண்ணீர் நிரம்பியுள்ள ஏரியும் நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

                                  சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு அங்கிருந்தும் கிளம்பி ஜங்கிள் சவாரி ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து மீண்டும் அங்கிருந்து நாங்கள் கிளம்பினோம்.வழியில் மான்களையும்,காட்டு பன்றிகளையும் பார்த்தோம்.அவ்வளுவுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்று வாகன ஓட்டுநர் கூறினார்.ஆனால் நல்ல அடர்ந்த காட்டு பயணம் நன்றாக இருந்தது.

                                      ஜங்கிள் சாரியில் இருந்து கிளம்பும்போது ,  உணவு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. உணவு சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. எனவே ஒரு ரோட்டுக் கடையில் அமர்ந்து அங்கே கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் எங்களுடைய பயணத்தை துவக்கி மாலை 7.10 நிமிடத்திற்கு  போல் நாங்கள் ராமானுஜர் சிலை பகுதியை அடைந்தோம்.

                       ராமானுஜர் சிலையை நாம் காண்பதற்கு ரூபாய் 200 என்ட்ரி பி கொடுத்தே ஆகவேண்டும். என்ட்ரி பீ இருந்தால் மட்டுமே ராமானுஜரை காண இயலும். 

                             ராமானுஜர் அருகில்   நூற்றுக்கும் மேற்பட்ட கோபுரங்களை வைத்துள்ளதாக கூறினார்கள். அவற்றையும் பார்த்துவிட்டு ,  ராமானுஜர் தொடர்பாக ஒரு சவுண்ட் அண்ட் லைட் காட்சியும்  நடைபெறுகிறது அதையும் நாம் பார்க்கலாம். 

                                   ராமானுஜர் சிலையை பார்த்துவிட்டு அங்கிருந்து அன்றிரவு நாங்கள் எங்களுடைய அறைக்கு ஹைதெராபாத் நோக்கி சென்றோம்.இரவு அறையை அடையும்போது நேரம் 10.00 மணி. இரவு உணவை கட்சிக்குடா பகுதியில் உள்ள ஸ்வாதி ஹோட்டலில் சாப்பிட்டோம்.மிக அருமையாக இருந்தது.மூன்றாவது நாள் பயணத்தை விரைவில் காண்போம்.


பயணம் சென்ற இடங்கள் : ஹைதெராபாத் - ஸ்ரீசைலம் டேம் - ஸ்ரீசைலம் கோவில் - பழங்குடியினர் காட்சியகம் - ஆக்டோபஸ் வியூ பாயிண்ட் - ஜங்கிள் சபாரி - ராமானுஜர் சிலை - லைட் அண்ட் சவுண்ட் காட்சி - இரவு ஹைதெராபாத் திரும்புதல் - மொத்த பயணம் 503 KM ( இந்த இடங்கள் அனைத்துமே ஸ்ரீசைலம் டூ ராமானுஜர் சிலை செல்லும் வழியிலேயே உள்ளது.இதற்காக தனியாக பயணிக்க வேண்டாம்.)


பயணம் தொடரும் 


அன்புடன் 

எம்.எஸ்.லெட்சுமணன்,

காரைக்குடி.







No comments:

Post a Comment