தேசிய இளைஞர் தினம்
விவேகானந்தர் பிறந்த நாள்
பொன்மொழி, ஓவியம் வரைதல் போட்டிகள்
தேவகோட்டை
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
தேசிய இளைஞர் தினமான விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி
தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ,செல்வமீனாள் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மாணவர்கள் விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் கூறியதுடன் ஓவியங்கள் வரைந்தும் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற
மாணவர்கள் நவீன்,ஏஞ்சல் ஜாய் ,சொர்ணமேகா,கவிஷா, ஹரிப்ரியா,யோகேஸ்வரன்,தனலெட்சுமி,அனுசுயா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
படவிளக்கம்
: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி
மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த தினத்தை
முன்னிட்டு ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறுதல் போட்டிகள்
பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் கருப்பையா , ஸ்ரீதர் , செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோர் அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க
செய்தனர்.
விவேகானந்தர் பொன்மொழிகள் - வீடியோ
https://www.youtube.com/watch?v=Yn9cMWQr090
No comments:
Post a Comment