Monday 2 January 2023

 லிங்கங்களின் தரிசனம் - கீசர குப்தா 

படகில் சென்று ஏரியின் நடுவே புத்தர் சிலை பார்த்தல் 

நல்ல திட்டமிடல் சுற்றுலாவை இனிமையாக்கும்  

ஹிந்தி தெரிந்திருந்தால் தான் தமிழ்நாட்டை தாண்டி எங்கு சென்றாலும் பேச முடியும் 

ஆறு நாட்கள் ஹைதெராபாத் சுற்றுலா 


முதல் நாள் சுற்றுலா  - தொகுப்பு 1













 நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரை சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களை சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தோம்.

                               இதில் முக்கியமான வெற்றிக்கு காரணம் திட்டமிடல் தான். திட்டமிட்டால் வெற்றி பெறலாம். எங்களுடைய திட்டத்தின் காரணமாக அறை வாடகை மற்றும் நாங்கள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களுக்கான கார் செலவுகள் மிகவும் சாதகமான முறையில் எங்களால் அமைக்கப்பட்டது.

                                     அதற்கு காரணம் பல்வேறு நண்பர்களின் உதவிகள் தான். தகவல்கள் தான். கோயில்களின் நகரம் ஆக இருக்கக் கூடிய ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தை துவக்கினோம்.

                                  முதல் நாள் காலை திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயிலை அடைந்தோம். கோவிலுக்கு செல்வதற்கு முன்பு ஹைதராபாத்தில் கோட்டி என்கிற இடத்தில் சுப்ரபாத் ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டோம்.மிக அருமை.அங்குள்ள சுவாமியை நன்றாக தரிசனம் செய்தோம். மலை உச்சியில் இருக்கின்றது  கோயில்.

                 அங்கே குரங்குகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன. நம்மை சுற்றி சுற்றி வருகின்றன. எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அனுமார் சிலைகளும் மிக அதிக அளவில் உள்ளன.

                           மிக நீண்ட வரிசைக்கு பிறகு சுவாமியைத் தரிசனம்  செய்து மீண்டும் அருகே உள்ள மழையும் தண்ணீரும் இணைந்த சுனை போன்ற பகுதியை சென்று அடைந்தோம். அங்கு சில மணித்துளிகள் இருந்துவிட்டு மீண்டும் மலை உச்சியில் இருந்த எங்களது காரை எடுத்துக்கொண்டு யாதகிரி குட்டா நோக்கி சென்றோம்.

                            யாதகிரிகுட்டா திருப்பதியை போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும். இங்கு மிக எளிதாக நம்மால்  மழையை சென்று அடைய முடியவில்லை. ஏனெனில் ஒரு  கார் மேலே ஏறுவது என்றால் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து 500 ரூபாய் கொடுத்த பிறகுதான் மேலே விடுகின்றனர்.

                                 ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டாம் என்று பஸ்ஸை பிடித்து செல்லலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் பஸ்ஸில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. தெலுங்கானா  அரசானது ஃப்ரீயாக பஸ்ஸை இயக்குகிறது. ஆனாலும் பஸ்ஸில் ஏறுவதற்கு மிகப் பெரிய கூட்டம் அலைமோதி அடித்துப்பிடித்து ஜன்னல் வழியாக ஏறுகின்றனர் .

                                     நாங்களும் எப்படியோ ஏறி மேலே சென்றால் அங்கு நிற்கிறது மிகப் பெரிய கூட்டம். மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறப்பு தரிசன பணம் பெற்று அதிலும் பார்க்க முடியாமல் மிகவும் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பேருந்து இருக்கு வந்தால் அதே நிலைமைதான்.

                             நான் ஏறிவிட்டேன் பேருந்தில். ஆனால்  என் மனைவியும் எனது மகனும் ஏறுவதற்குள் வண்டியை இயக்கி விட்டார்கள். மொழி தெரியவில்லை. ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தெலுங்கும் தெரியவில்லை. பிறகு பேருந்து ஓட்டுனர் இடம் சத்தம் போட்டு பஸ்ஸை  நிற்க வைத்து எனது மனைவியும் மகனையும் பேருந்தில் ஏற்றி கீழே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

                                    மிக சிரமத்திற்கு இடையில் தான் நாங்கள் அங்கிருந்து கீழே இறங்கி வந்தோம். பிறகு அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுரேந்திரபுரி அடைந்தோம். சுரேந்திரபுரி சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கும் மேலாக 108 கோபுரங்களின் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

                                    கோயில்களின் கோபுரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது .இதனையும் நன்றாக தரிசித்துவிட்டு அங்கிருந்து நாங்கள் கிளம்பி நேராக நகர விடுதி அடைத்தோம். நகர விடுதிகளில் அறைகள் எல்லாம் பார்த்து விட்டு நகர விடுதியிலிருந்து லும்பினி பார்க் பகுதியில் லும்பினி பார்க் என்டிஆர் கார்டன் போன்றவை அருகருகே அமைந்துள்ள இடத்திற்கு சென்றோம்.

                           . பார்க்கிற்கு உள்ளே செல்வதற்கு ஒரு ஆளுக்கு 50 ரூபாய் காசு வசூல் செய்கிறார்கள். உள்ளே அமைந்துள்ள புத்தர் சிலையை நாம் தானே போட்டில் சென்ற பார்க்க வேண்டும். போட்டில் செல்வதற்கு  காசு உண்டு.ரூபாய் 50 ஒரு நபருக்கு கொடுக்க வேண்டும்.அதற்கும் மிக பெரிய வரிசை நிற்கிறது.

                                            . டான்ஸ் போட்டு, ஸ்பீட் போட் போன்றவையும் உண்டு.  புத்தர் சிலை உள்ள இந்த இடம்தான் மிகப்பெரிய ஏரி நடுவில் உள்ளது.இந்த ஏரிதான் ஹுசைன் சாகர் லேக் ஆகும்.புத்தர் சிலை ஒரே கல்லில் ஆன சிலையை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி பார்க்கின் மையப்பகுதியை வந்தடைந்தோம். 

                                       அங்கே  லேசர் சோ காட்சிகளை 1 மணி நேரம் இரவு ( 7.15 மணி அளவில் ) பார்த்துவிட்டு, (ஒரு ஆளுக்கு 200 ரூபாய்) லைட் அண்ட் சோவை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். புத்தர் சிலை  பகுதியில் இருந்து நாம் படகில் வரும்பொழுது  புதிய தலைமைச் செயலகம் மற்றும் பிர்லா மந்திர் கோயில்களை கண்கொள்ளா காட்சியாக லைட் அமைப்புகளோடு  நாம் பார்க்கலாம்.

                            இந்த பயணத்தில் எங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க  வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தெலுங்கும் தெரியாது.எங்களுக்கு  ஆங்கிலம் தெரியும் ஆனால் ஆங்கிலம் பேசுவதற்குஅவர்கள்  தயாராக இல்லை. எனவே கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கு  தெரிந்த ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டு அன்றைய நாள் முழுவதையும் ஓட்டினோம்.

முதல் நாள் பயணித்த இடங்கள் : காலை 8.30 மணிக்கு ஹைதெராபாத் எங்கள் அறையில் இருந்து கிளம்பினோம்.கீசர குப்தா - யதாகிரி குப்தா - சுரேந்தரபுரி -  லும்பினி பார்க் - புத்தர் சிலை போட்டில் சென்று பார்த்தல் - ஹுசைன் சாகர் லேக் பார்த்தல் ( புத்தர் சிலை உள்ள லக்தான் )  - லும்பினி பார்க்கில் லேசர் ஷோ பார்த்தல்  - மீண்டும் அறைக்கு இரவு 9.30 மணி அளவில் திரும்புதல் ( மொத்த கிலோமீட்டர்  பயணம் - 193 KM)


மதியம் சாப்பாடு : யாதகிரி குப்தா மலையில் இருந்து சுரேந்தரபுரி நோக்கி செல்லும்போது யாதகிரி குப்தா பேருந்து நிலையத்தின் அருகே உடுப்பி ஹோட்டலில் மதியம் சாப்பாடு, இட்லி, தோசை,பூரி ஆகியவை சுட,சுட நன்றாக கிடைத்தது. இரவு உணவு ஹைதராபாதில் பேகம்பட் பகுதியில் உள்ள பரடைஸ ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டோம்.நன்றாக இருந்தது.

பயணம் தொடரும் 

அன்புடன் 

எம்.எஸ்.லெட்சுமணன்,

காரைக்குடி.

                          






No comments:

Post a Comment