Wednesday 30 June 2021

 தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்

 அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

 கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 



















தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே  அஞ்சல் அட்டை மூலம் தங்களது பெற்றோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  வலியுறுத்தி விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
                                                            இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின்  பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள். பொதுமக்கள் அனைவரும்   100 சதவிகிதம்   கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் இணையம் வழியாகவும்,அலைபேசி வழியாகவும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக  கடிதம் எழுதுமாறு அறிவுரை வழங்கினார்கள் . இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது: சமீபத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்க பள்ளிக்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை என்பதை அவர்களிடம் பேசும்போது அறிந்து கொண்டேன்.எனவே பள்ளி மாணவர்களின் வாயிலாகவே அவர்களின் பெற்றோர்களுக்கும், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி , அரசின் இலவச கொரோனோ தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, மாணவர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நானும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோரும் கேட்டுக்கொண்டோம்.

                அஞ்சல் அட்டையில் "தடுப்பூசி போடுவோம்.கொரோனாவை தடுப்போம் . இலவச தடுப்பூசியை இன்முகத்துடன் போட்டுக்கொள்வோம். அரசின் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்துவோம் " என்ற வாசகத்தை  எழுதி , தங்களது பெற்றோர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள   வலியுறுத்தினர்.கொரோன காலத்திலும்  இளம் வயது பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதம் .இதனை பொதுமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் தெரிவிக்கவே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடமும் இதனை கூறும்போது நல்ல பலன் கிடைக்கும் .   இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.


                          

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே  அஞ்சல் அட்டை மூலம் தங்களது பெற்றோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  வலியுறுத்தி விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள். 



கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாணவர்களின் அஞ்சல் அட்டை விழிப்புணர்வு வீடியோ

https://www.youtube.com/watch?v=0kn7VJtIaPE


No comments:

Post a Comment