Wednesday 11 July 2018

 அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூலம் ஒரே நாளில் இலக்கு என்பது என்ன,எனது எண்ணத்தை எவ்வாறு தைரியமாக வெளிப்படுத்தலாம் ,பிரச்சனைகளில் இருந்து வெளிப்படுவது எவ்வாறு,நினைவாற்றல் அதிகப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பான வாழ்வியல்  திறன் பயிற்சி . எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி ,60 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் ,சான்றிதழ் வழங்கப்படுகிறது .எங்கு? எப்போது ?



இவை அனைத்தும் நிகில் அறக்கட்டளை வழியாக காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி,கல்லல் ,பீர்க்கலைக்காடு ,அமராவதி புதூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வருகிற 21- 07-2018 அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை வழங்கப்படுகிறது.

நிகில் அறக்கட்டளை குறித்து மேலும் சில தகவல்கள் :
                                      திரு.நாகலிங்கம் மற்றும் அவரது மனைவி மலர்க்கொடி இருவரும் இணைந்து நிகில் அறக்கட்டளை ஆரம்பித்து  தொடர்ந்து இது வரை சுமார் ஒரு லட்சத்து அறுபத்து  ஏழாயிரம் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே சென்றே ஒரு நாள் முழுவதும் வாழ்வியல் திறன் பயிற்சி ( 50 மாணவர்களுக்கு ஒரு பயிற்றுனர் என்கிற விகிதத்தில் ) உன்னையே நீ அறிதல்,இலக்கு நிர்ணயித்தல் ,தகவல் தொடர்பு ,நினைவாற்றல் பயிற்சி என்கிற தலைப்புகளில் பயிற்சி இலவசமாக 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர் ..பயிற்சியின் நிறைவாக இந்த தலைப்புகளில் உள்ள தகவல்கள் அடங்கிய புத்தகம்  மற்றும் சான்றிதழ் அனைத்து மாணவர்களுக்கும் பரிசாக வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை,மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள பள்ளிகள் நிகில் திரு.நாகலிங்கம் ( ,9443117132,7010963642,9003659270) அவர்களை தொடர்பு கொள்ளலாம் .சனிக்கிழமைகளில் மட்டுமே இந்த பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முயற்சி இன்னும் பல லட்சம் மாணவர்களை சென்று அடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்  லெ .சொக்கலிங்கம் ,நிகில் அறக்கட்டளை உறுப்பினர்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.


பின்குறிப்பு : தமிழகத்தின் எந்த பள்ளிக்கும் இந்த பயிற்சி தேடி வரும் நீங்கள் தொடர்பு கொண்டால் இலவசமாக வரும். 






No comments:

Post a Comment