Wednesday 25 April 2018

மாணவர்கள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் 
பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சு 

நூலக புதிய உறுப்பினர் அட்டை  வழங்கும் விழா


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நூலக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
                                       விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு னுள்ளாக புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசும்போது ,தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன .இதனை மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது .நிறைவாக மாணவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நூலக புதிய உறுப்பினர் அட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார் .

No comments:

Post a Comment