Saturday 14 April 2018

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 செயற்கைகோள் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை தொடர்புக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 செயற்கைகோள் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் விண்ணில் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 செயற்கைகோள் அனுப்பப்பட்டதுடன் கடல்சார் ஆராய்ச்சி ,சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது,பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பயன்களுக்கு உதவும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 செயற்கைகோள் வெற்றிக்கு  வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.





No comments:

Post a Comment