மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி
ரூபாய் 3000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை
அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவி நந்தனா மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ரூபாய் 3000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி உடன் இருந்தார்.மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பல பேர் பங்கேற்ற இப்போட்டியில் இப்பள்ளி மாணவி நந்தனா வெற்றி பெற்று இரண்டாம் பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பரிசு பெற்ற மாணவியை பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம், தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் குமார், சூர்யா தேவி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி நந்தனா தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ரூபாய் 3000 பரிசும்,பாராட்டு சான்றிதழும் வழங்கினார் .சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி உடன் இருந்தார்.
No comments:
Post a Comment