Wednesday 18 May 2022

 முதல் தலைமுறை நூலக உறுப்பினர்கள்

நூலக புதிய உறுப்பினர் அட்டை  வழங்குதல்  

 

மாணவர்கள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் 
நூலகர் வேண்டுகோள் 


 






 தேவகோட்டை -   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நூலக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
                                       பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை தேவகோட்டை கிளை நூலகர் ஜோதிமணி வழங்கி பேசும்போது ,தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன .விடுமுறை காலங்களில் இதனை மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது . முதல் தலைமுறையாக இம்மாணவர்கள் நூலக அட்டை பெற்று நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,நூலக அலுவலர் சுரேஷ் காந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நூலக புதிய உறுப்பினர் அட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தேவகோட்டை கிளை நூலகர் ஜோதிமணி வழங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=ZpiYrLyH96Q

 

No comments:

Post a Comment