சான்றிதழ் வழங்கும் விழா
பாரம்பரியமான உணவை சாப்பிடுங்கள்
சுகாதார ஆய்வாளர் பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், பாரம்பரியமான உணவை எப்போதும் சாப்பிடுங்கள். பொருள்களை வாங்கும்போது தேதி முடிவந்தடைந்து விட்டதா ? இல்லையா? என்பதை பார்த்து வாங்குங்கள் என்று உணவு பொருள்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி பேசினார்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கனார் .
வீடியோ :
https://www.youtube.com/watch?v=Y3MKDM1vfTQ
https://www.youtube.com/watch?v=jH-d8FX2iiU
No comments:
Post a Comment