108 வாகன செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள்
108 வாகனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்
பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது
108 வாகன பொறுப்பாளர் தகவல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக நேரில் விளக்கப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை 108 வாகன பொறுப்பாளர்கள் கருணாகரன்,மகேஸ்வரன் ஆகியோர் முதலுதவி தொடர்பாக மாணவர்களிடம் பேசுகையில், 108 தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் போய் சேர வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள்தான் அதிகம் 108 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.108 என்ற எண்ணுக்கான தொலைபேசி தொடர்பு இலவசம்தான்.இதன் கண்ட்ரோல் சென்னையில்தான் உள்ளது .அலைபேசி மூலம் தொடர்பு கொண்டதும் எந்த மாவட்டமாக எங்கே இருந்தாலும் 10 நிமிடத்தில் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.எல்லா விஷயத்துக்கு போன் பண்ணலாம்.தீக்காயம்,பிரசவம்,காய்ச்சல்,பாம்பு கடித்தல் போன்ற அனைத்துக்குமே தொடர்பு கொள்ளலாம்.பாம்பு கடித்தல் , தீக்காயம் , காய்ச்சல்,வலிப்பு,கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு முதலுதவி செய்வது என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் விளக்கினார்கள்.108 வாகனத்தில் என் கே 48 திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவித்தனர். மாணவர்கள் நதியா,ஸ்ரீதர்,முத்தய்யன் ,சந்தோஷ்,ஜெயஸ்ரீ ஆகியோரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக தேவகோட்டை 108 பொறுப்பாளர்கள் கருணாகரன், மகேஸ்வரன் ஆகியோர் நேரில் விளக்கம் அளித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=5EWo1t2gChc&t=3s
மேலும் விரிவாக :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகன பொறுப்பாளர்கள்கருணாகரன்,மகேஸ்வரன் ஆகியோர் முதலுதவி தொடர்பாக நேரடி விளக்கம் அளித்ததாவது :
பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுக்க கூடாது .ஏன்?
சில
விஷயங்கள் மக்கள் தவறான செயல்களை மேற்கொள்வதால் பாதிப்பு
ஏற்படலாம்.உதாரணமாக பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தத்தை
எடுப்பார்கள்.இது தவறானது.சில சமயங்களில் இது இருவருக்குமே ஆபத்தாகி
விடும்.பாம்பு கடித்தால் அந்த இடத்தில் இறுக்கிக் கட்டுதல் வேண்டும்.அவரை
ஓடவோ,நடக்கவோ விடக்கூடாது.சோப்பு போட்டு கழுவ வேண்டும்.மருத்துவமனைக்கு
சென்ற பிறகு முறையான சிகிச்சை மேற்கொள்வார்.
தீக்காயம் :
தீக்காயம் ஏற்பட்டால் சிறிய கொப்பளமாக
இருந்தால் தண்ணீரில் நனைக்கலாம் .சில்வர் ஆயிண்ட்மென்ட்
போடலாம்.மண்ணென்ணெய் ஊற்றினால் தோல் கருகி விடும்.போர்வை போட்டு போர்த்தி
உருட்டி விடவேண்டும்.
காய்ச்சல் :
காய்ச்சலால் நரம்பு பாதித்து இருந்தால்
சுடுதண்ணீர் ஈரத்துணியால் துடைத்து விட வேண்டும்.பத்துப் போட்டு விடலாம்.
நெஞ்சு வலி :
நெஞ்சு வலி என்றால் படுக்க வைக்கக்கூடாது.உட்கார வைத்து ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தி விடவேண்டும்.
வலிப்பு நோய் :
வலிப்பு வந்தால் இரும்பு சாவி கொடுக்க
கூடாது.இரும்பு பொருள் எதையும் கொடுக்காமல் பிரீயாக விட்டு
விடவேண்டும்.அந்த நேரத்தில் நாக்கை கடிப்பார்கள்.இடதுபக்கம் தலையை மட்டும்
திருப்பி விட வேண்டும்.நாக்கையும் ,உதட்டையும் கடித்து கொண்டு காயம்
ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு கனமான துணியை வாயில் வைத்தல் வேண்டும்.
கத்தியால் வெட்டுப்பட்டால் என்ன செய்வது ?
காயம்பட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும்.துணியை வைத்து கட்டுபோடவேண்டும்.
மயங்கி விழுந்தால் என்ன செய்ய வேண்டும் ?
மயங்கி விழுந்தால் கையில் நாடி துடிப்பு பார்க்கவேண்டும்.விரலை வைத்து
தொண்டையில் துடிப்பு பார்க்கவேண்டும்.இதனை நாம் செய்யக்கூடாது.பயிற்சி
பெற்ற செவிலியர்,மருத்துவர் மட்டுமே பார்க்க வேண்டும்.நம்ம சுவாசத்தை
அவர்கள் வாயில் வைத்து சுவாசம் கொடுக்கப்படல் வேண்டும்.
எலும்பு முறிவு :
எலும்பு முறிவு ஏற்பட்டால் எலும்பு உடைந்த
இடத்தில் அட்டை,மட்டை கொண்டு துணி வைத்துக் கட்டி விடவேண்டும்.மேலும்
அடிபட்ட இடம் அசையாமல் பார்த்து கொள்ள வேணும்.அப்படி இருந்தால் அடுத்த
இடத்துக்கு எலும்பு உடையாமல் தடுக்க படும்.உங்கள் அருகில் உள்ள நீளமான
மட்டை அல்லது அட்டை கொண்டு இதனை செய்யலாம்.
விசம் சாப்பிட்டால் எப்படி காப்பாற்றுவது ?
பூச்சி
மருந்து,பாய்சன் ஏதாவது சாப்பிட்டால் வாய் வழியே எதுவும்
கொடுக்கக்கூடாது.வாந்தி எடுப்பார்கள்.எதுவும் செய்தல் கூடாது.
108ன் சிறப்புக்கள் :
பொதுவாகவே எந்த நோயாளியையும் ஆட்டோ ,வண்டி
இவற்றில் மருத்துமனைக்கு செல்வதை விட 108ல் சென்றால் சரியான சிகிச்சையுடன்
,முதலுதவிவுடனும், செல்லலாம்.வண்டியில் இரண்டு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் ,ஒரு சின்ன போர்ட்டபெல் சிலிண்டரும் உள்ளது.இதனை கையிலேயே வைத்து கொண்டு நோயாளியுடன் மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.
பிரசவத்துக்கு அருமையான வசதி :
பிரசவம் எந்த நேரமும் ஏற்படலாம்.கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 14 வகையான
பொருள்களுடன் டெலிவரி கிட் உள்ளேயே உள்ளது.பிரசவம் பார்க்கக்கூடிய
செவிலியர்களும் உள்ளனர்.தாயுக்கும் ,குழந்தைக்கும் தேவையான அனைத்து
பொருள்களும் உள்ளே இருக்கும்.
சர்க்கரை நோயாளி :
சர்க்கரை நோய் நோயாளிகள் நினைவில்லாமல் நம்மை
அடிக்க கூட செய்யலாம்.சீனி கரைத்து கொடுக்கலாம்.சாக்லேட்
கொடுக்கலாம்.அவையும் உள்ளேயே இருக்கும்.
தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்ற வசதி :
108 வாகனத்தில்
திருகு பலகை,சூழல் பலகை ,சக்கர நாற்காலி ஆகியவை உள்ளன.சூழல் பலகை தண்ணீரில்
மிதக்கும்.தண்ணீரில் விழுந்தால் சூழல் பலகை மூலம் எளிதாக நோயாளியை தூக்கி
விட முடியும்.
உயரத்தில் இருந்து விழுந்தால் காப்பாற்றும் உதவி :
மிகவும் உயரத்தில் இருந்து விழுந்து இடுப்பு,தொடை
எலும்பு முறிவு ஏற்பட்டால் நோயாளியை அசையாமல் சூழல் பலகையில் வைத்து
எடுப்பது எளிது.அப்படியே அசையாமல் மருத்துவமனையில் படுக்கையில் வைக்கவும்
சூழல் பலகை பயன்படுகிறது.ஐந்து மாடியில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல்
ஏற்பட்டால் அவரை கீழே பாதிப்பு இல்லாமல் இறக்க சக்கர நாற்காலி உள்ளது.
சப்தத்தில் வித்தியாசம் :
108 வண்டி செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும்
தேவைக்கு ஏற்ப சப்தம் அதிக படுத்தும் வசதி உள்ளது.ஆட்டோ,பைக் போன்றவற்றில்
செல்லும்போது எந்த நிலையில்,எந்த காரணத்திற்காக செல்கிறோம் என்பது
தெரியாது.ஆனால் 108இல் செல்லும்போது சப்தத்துக்கு தகுந்தாற்போல் நாம்
வேகமாக வழி கிடைத்து செல்லலாம்.
No comments:
Post a Comment