புத்தக திருவிழா போட்டிகளில் அசத்திய மாணவிகளுக்கு பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் சிவகங்கை புத்தக திருவிழா போட்டிகளில் பங்கேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் இப்பள்ளி மாணவர்கள் கலவை நடனம், மாறுவேடப்போட்டி ,குறும்பட மதிப்புரை எழுதுதல் போட்டிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி மற்றும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
பட விளக்கம் : சிவகங்கை புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் நடனம் ஆடியும் , மாறுவேட போட்டியில் பங்கேற்றும் ,குறும்பட மதிப்புரை எழுதியும் பாராட்டு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் .
வீடியோ :
https://www.youtube.com/watch?v=QES1yATzqzo&t=24s
https://www.youtube.com/watch?v=cDg2oXC5j3g
https://www.youtube.com/watch?v=7Bkz8FC8SYs
No comments:
Post a Comment