Sunday 23 May 2021

 நன்றி ! நன்றி ! நன்றி !

கொரோனா விழிப்புணர்வில் ஜூம் வழியாக நடத்திய நிகழ்வில் அனைவரின் கேள்விகளுக்கும் அருமையாக,பொறுமையாக ,தெளிவாக பதில் அளித்த மருத்துவருக்கு வாழ்த்துக்கள்!

நிகழ்வை இணைந்து ஏற்பாடு செய்திருந்த TNPTF  மற்றும் MUTA  இயக்கங்களுக்கும் நன்றிகள் பல !




தோழர்களே , இன்று டி என் பி டி எப் இயக்கமும், மூட்டா இயக்கமும் இணைந்து நடத்திய ஜூம்  மீட்டிங் வழியான கொரனோ விழிப்புணர்வு மிகவும் அருமையான நிகழ்வாக அமைந்திருந்தது.  மருத்துவர் தோழர் பிரகாஷ் அவர்கள் மும்பையிலிருந்து மிகத் தெளிவாக பொறுமையாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை எடுத்துக்கூறினார். ஒரு நிமிடம்கூட முகம் சுளிக்காமல் எண்ணற்ற கேள்விகளுக்கு தெளிவான தகவல்களை எடுத்துக்கூறினார். தோழர் மூட்டா நாகராஜன் அவர்கள் மிக அழகாக நிகழ்வை வழிநடத்தி சென்றார்கள். பல தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான ,மிக அருமையான பல்வேறு விதமான பதில்களை எடுத்து வழங்கிய மருத்துவர் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த டிஎன்பிடிஎப்  இயக்கத்திற்கும், மூட்டா இயக்கத்திற்கும் நன்றிகள் பல. பல ஜூம் மீட்டிங்கல்களில் அனைவரையும் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை.சில இடங்களில் வேண்டியவர்களுக்கு மட்டுமே கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு தரப்படுகிறது.ஆனால் கொரோனா தொடர்பான சரியான நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவரும் பொறுமையாக இருந்து, எத்துணை கேள்விகள் கேட்டாலும் நன்றாக உள்வாங்கி சப்தமாக பேசி தெளிவாக விளக்கிய விதம் மிகவும் அருமை. நல்ல முறையில் அனைத்து  தோழர்களுக்கும் கேள்விகள் கேட்க வாய்ப்பு கடைசி வரை வழங்கப்பட்டதற்கும் மிக்க நன்றிகள் பல.

  நன்றி கலந்த தோழமையுடன் 

லெ . சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்

 

 

 

 


No comments:

Post a Comment