உழைப்பாளர் தினம் போட்டிகள்
உழைக்க தெரிந்தவன் தான் மனித ஜாதி - உழைப்பின் மேன்மையை உரக்கச் சொல்லிடு - கவிதை வாயிலாக உழைப்பாளர் தின வாழ்த்து சொன்ன மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்களுக்கு இணையம் வழியாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள் ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் உழைப்பாளர் தினத்தை உரக்கச் சொல்லும் வகையில் உழைப்பவர்களின் வியர்வை துளியை பாராட்டும் விதத்தில் கவிதைகளை வீடியோவாகவும், உழைப்பின் மேன்மையை போற்றிட ஓவியங்கள் வரைந்தும் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=adCeB094jR0
https://www.youtube.com/watch?v=YnHEll6Qem4
https://www.youtube.com/watch?v=YICzh2H0F1Q
No comments:
Post a Comment