Tuesday 11 May 2021

கல்வி தொலைக்காட்சி பார்த்து ஆர்வத்துடன் பாடங்களை படிக்கும் மாணவர்கள்  

 








தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி   தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி பாடங்களை ஆர்வத்துடன் பார்த்து படித்து வருகிறார்கள்.

            தமிழகம் முழுவதும்  கரோனா ஊரடங்கால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மேலாக விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஒளிபரப்பாகும் நேரங்களை தாளில் எழுதி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சி பார்க்க சொல்லியும் வலியுறுத்தி கூறி வருகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியை பார்த்து பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

       பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறும்போது, மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை பயின்று பதில் அளித்து வருகின்றனர்.எங்கள் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை தொலைபேசி வழியாக தினமும் காலையில் தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சியை பார்த்து பயிற்சிகளை செய்து முடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.மாணவர்களும் ஆர்வத்துடன் கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாட பயிற்சி கட்டகங்களை பயின்று வருகின்றனர்.கரோனா ஊரடங்கால் கல்வி தொலைக்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் இதனை அறியும் வகையில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தனி,தனியாக தகவல்களுடன் கூடிய விழிப்புணர்வு நகல்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.அதில் பாடங்கள் நேரம், ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.பல பெற்றோர்கள் அலைபேசி வழியே தொடர்பு கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திகொண்டு வருகின்றனர்.என்றார்.

 

படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி   தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி பாடங்களை ஆர்வத்துடன் பார்த்து படித்து வருகிறார்கள்.

 


No comments:

Post a Comment