Friday 2 April 2021

 சர்வேதச  குழந்தைகள் புத்தக தினம் 

 தொட்டு பார்த்தால் காகிதம் -  தொடர்ந்து படித்தால் அதுவே  வெற்றியின் ஆயுதம் -  அதுதான் புத்தகம் - மாணவர்கள் விழிப்புணர்வு பேச்சு

 
  இணையம் வழியாக  புத்தகம் வாசிக்க  விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 






தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில்  சர்வேதச  குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் ,   பேசியும் இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச  குழந்தைகள் புத்தக தினத்தை  முன்னிட்டு  ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  புத்தகம் வாசிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்க   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில்  பரிசுகள் வழங்கப்பட உள்ளது.போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் புத்தகம் வாசிப்பு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களையும், வாசிப்பின் அருமை குறித்தும் தெளிவாக பேசினார்கள்.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சர்வேதச  குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பி இணையம் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 


   கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  சர்வேதச  குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு  வீட்டிலேயே  கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பேசிய வீடியோக்களை YOU TUBE யில் காணலாம். :   

https://www.youtube.com/watch?v=QRcnqZ4tZ_Y

https://www.youtube.com/watch?v=_EUt_QbABpA

https://www.youtube.com/watch?v=nGmGFP1mNIw




No comments:

Post a Comment