Sunday 19 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

               தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழு நிலைய அலுவலர்  நாகராஜ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

19/10/2019

                    தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,
                                                          சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை நல்ல பயனுள்ள, மாணவர்களுக்கு வேண்டிய ஒவ்வொரு நிகழ்வையும் நடத்தி வருகிறார்.பள்ளியில் அனைத்து மாணவர்களும் அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்து வருகிறாரகள் . நாங்கள் ஒவ்வொருவரிடமும் பேரிடர் மேலாண்மை , தீ தடுப்பு மற்றும் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் முதலியவற்றை எடுத்து கூறுகையில் , மாணவர்கள் அவற்றை  நன்கு கற்றுக் கொண்டு, அவர்களே நாங்கள் நடத்திய அனைத்து விளக்கம் மற்றும் பேரிடர் ஒத்திகையை  அவர்களே செய்து காண்பித்தார்கள். மிகச்சிறப்பாக, மாணவர்களின்  கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து உள்ளது  மிகவும் போற்றுதலுக்கு உரியது.

செ .நாகராஜ்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர்,
தேவகோட்டை.

31/10/2018
 

                             சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் தேவகோட்டை அலுவலர் மற்றும் பணியாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு வருடாவருடம் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தினோம். மாணவர்கள் சிறப்பாக நாங்கள் கூறிய கருத்துகளை மிகத் தெளிவாக உற்றுநோக்கி அதன்படி விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது என்று அறிவு பூர்வமான கருத்துக்களை தெளிவாக மாணவர்களை விவாதித்தார்கள். மகிழ்ச்சியாக, நன்றாக உள்ளது.


செ .நாகராஜ்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர்,
தேவகோட்டை.







                                    தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் செ .நாகராஜ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ள வரிகள் ஆகும்.

தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்களுடன் இனிமையான சந்திப்பு :

                                      தீயணைப்பு நிலைய அதிகாரி நாகராஜ் அவர்களுடனான அனுபவங்கள் புதுமையானது. எங்கள் பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீபாவளிக்கு முன்பாக பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்கிற நிகழ்வை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் மூலமாக அவர்களது குழுவின் உதவியுடன் நடத்தி வருகின்றோம். அதனுடன் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் விரிவாக தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பயிற்சிகள்  கொடுத்து வருகின்றோம். அதுபோன்று நிகழ்வுக்காக தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் அவர்களை சந்தித்தபோது மிகவும் அன்புடன் என்னிடம் பேசினார்கள். நிகழ்வுக்கு வந்துவிடுகிறோம் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள். நிகழ்வுக்கு வந்து மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி எவ்வாறு நாம் கொண்டாடலாம் என்கிற விவரங்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். 

மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்த தீயணைப்பு நிலைய அலுவலர் :

             மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பொறுமையுடன் அவரது குழுவினர் பல்வேறு தகவல்களை விளக்கினார்கள். விளக்கத்துடன் மாணவர்கள் வெடிகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதை சாலையில் பாதுகாப்பாக வெடிப்பது  எப்படி என்கிற தகவலையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். இருந்தபோதிலும் வெடி வெடிப்பது தவறானது, வெடி வெடிப்பது தேவையில்லாத செலவுகளை உருவாக்கும் என்கிற கருத்தையும் மாணவர்கள் மனதில் பதிய வைத்தார்கள். அவருடன் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியை தீயணைப்பு குழுவினர் எங்கள் பள்ளியில் வழங்கி வருகின்றார்கள். அப்போது மின் கசிவின் போது எப்படி லிப்டை பயன்படுத்த வேண்டும், கிடைக்கும் பொருட்களை வைத்து முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும், நீர்நிலைகளில் விழுந்தவர்களை   எவ்வாறு காப்பாற்ற வேண்டும்,  விஷவாயு தாக்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், வலிப்பு நோய்க்கு முதல் உதவி செய்வது எப்படி, காசு விழுங்கியது எவ்வாறு வெளியே எடுக்கலாம், திடீர் பருவநிலை மாறுபாட்டின் போது நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பன போன்ற தகவல்களை மிக விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
 தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் மாணவர்களிடம் முதுலுதவி செய்வது தொடர்பாக விளக்கி கூறும்போது ,
மின்கசிவின்போது லிப்ட் பயன்படுத்தாதீர்கள் :
                                                                   வணிக நிறுவனங்கள்,திருமண விழாக்கள் ,கோவில் திருவிழாக்கள்,உணவகங்கள்,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் கூடும் மக்கள் மின் கசிவினாலோ , கவன குறைவினால் ஏற்படும் தவறுகளினாலோ விபத்தில் சிக்கி கொண்டால் கூச்சல் போட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.எக்காரணத்தை கொண்டும் மின் தூக்கி பயன்படுத்துதல் கூடாது.இத்தருணத்தில் குழந்தைகள்,முதியவர்கள்,கர்ப்பிணிகள் ஆகியோருக்கு வழிவிட்டு உதவ வேண்டும்.அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.அவசர வழிகளை பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் பொருளை வைத்து முதலுதவி செய்யுங்கள் :
                        விபத்துக்களில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பது குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.முதலில் கிடைக்க கூடிய பொருளை வைத்து முதலுதவி செய்தல் வேண்டும்.ரத்த கசிவு உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.பின்பு காயம் பட்ட இடங்களை சுற்றி துணியை வைத்து மென்மையாக கட்ட வேண்டும்.காலை மேல் நோக்கி தூக்கி,மூக்கை முடிந்த அளவு மூடி ,தொண்டையை மேல் நோக்கி வைத்த நிலையில் சுவாசிக்க செய்தல் வேண்டும்.பின்பு மருத்துவ நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

கன்னத்தின் துடிப்பை உற்று கவனியுங்கள் :
                                கன்னத்தில் துடிப்பு ஏற்படுகின்றதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.இதயத்தில் இரு கைகளையும் வைத்து அழுத்தி ரத்த சுழற்சி சீராக இருப்பதற்கு சிகிச்சை தரவேண்டும்.சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நீர்நிலைகளில் விழுந்துவர்களை தலை முடியை பிடித்து தூக்குங்கள் :
                                கிணற்றில்,ஆற்றில்,ஏரியில் தவறி விழுபவர்களை  முதலில் தலைமுடியை பிடித்து தூக்குதல் வேண்டும்.பக்கவாட்டில் பிடிக்கக்கூடாது.பாதிக்கப்பட்டவர்களை நீளமான கயிறுகளை வீசி கரைக்கு இழுத்தல் மற்றும் மிதவைகளை பயன்படுத்தி அருகில் சென்று காப்பாற்றி வரலாம்.முறையான நீச்சல் பயிற்சி அறிந்திருந்தால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றி சுவாச பயிற்சி கொடுத்து ரத்த ஓட்டம் சீராக இயங்க வைக்கலாம்.தண்ணீரில் மூழ்குவோர் மூன்று வகையில் மேலெழும்பி வருவார்கள்.விடா முயற்சியால் அவர்களை காப்பாற்றலாம்.

விஷவாயு கிணற்றில் விழுந்தவர்களை கவனமாக காப்பற்றவது எவ்வாறு ?
                                               பயன்படாத கிணறுகளில் விஷ வாயு இருக்க வாய்ப்புகள் உண்டு.அதற்கு தண்ணீரை பாதிக்கப்பட்டோரின் மேலே தெளித்தால் உணர்வு நிலை ஏற்படும்.பின்பு தீயணைப்பு நிலையத்திற்கோ அல்லது மருத்துவ ஊர்திக்கு தகவல் அளிக்கலாம்.

காசு முழுங்கியதை வெளியே எடுக்கும் முறை :
                               குழந்தைகள் பெரிய மாத்திரைகளை ,காசுகளை விழுங்கினால் ,அவர்களை தலைகீழாக பிடித்து பின்புறமாக தட்டினால் எளிதில் உள்ளே சென்ற பொருள் வெளியே விழுந்துவிடும்.

வலிப்பு நோய்க்கு முதலுதவி செய்வது எப்படி ?
                                காக்கா வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டோர் கையில் சாவிகள் கொடுக்க கூடாது.அவை காயங்களை ஏற்படுத்தும்.காதுகள் இரண்டையும் மூடிய நிலையில் வைத்து ஒரு புறம் சாய்ந்து படுத்தால் குணமாக்கி விடலாம் என்று சொன்னார்கள்.

விஷம் குடித்தவர்களை காப்பாற்றுவது எப்படி ?
                            விஷம் குடித்தால் இரண்டு வகை பாதிப்புகள் உண்டாகும் .செல்களை அழிப்பவை ,செல்களை அழிக்காதவை .பூச்சி மருந்து போன்ற விஷங்களை அருந்தினால் உப்பு தண்ணீர் கொண்டு வாந்தி எடுக்க வைக்க வேண்டும்.
                            ஆசிட் போன்ற மருந்துகளை குடித்தால்,கோதுமை மாவு போன்று மாவு பொருள்களை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

திடீர் பருவ நிலை மறுபாட்டின்போது எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ?
    முதலில்  சிலிண்டரை  ஆஃப் செய்துவிட வேண்டும். மின்சார தொடர்பை துண்டித்து விடவேண்டும். கழிவறையை மூடிவிடவேண்டும் .பேட்டரி போட்ட டார்ச் லைட் வைத்துக்கொள்ளவேண்டும் . அவசர காலங்களில் அரசு நன்றாக உதவி செய்யும் அதே நேரத்தில் நாமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரட் போன்ற அத்தியாவசிய சாப்பிடும் உணவுகளை வாய்ப்பிருந்தால் வாங்கி வைத்துக்கொள்ளலாம் . வெள்ளம் திடீரென அதிகமாக வந்துவிட்டால் பிளாஸ்டிக்கால் ஆன வாட்டர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு  கட்டிக் கொண்டு நாம் அந்தத் தண்ணீரிலிருந்து எப்படியாவது நீந்தி கரை சேர்ந்து விட வேண்டும் . லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு வாய்ப்பு இருந்தால் அதன் மூலமாக தீயணைப்பு வீரர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் . தண்ணீர் செல்லும் சூழ்நிலையிலேயே சென்று இழுத்துக்கொண்டு போகும் வழியிலேயே போய் நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் . முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு வகையில் நமக்கு உதவிசெய்யும்.  வெள்ள காலத்தில் தொற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகும் . முடிந்த வரை நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றை நாம் கட்டிக்கொண்டு அதன் மூலமாக நீந்தி தப்பித்துவிடலாம்.  இதுபோன்ற தகவல்களை நீங்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.  மக்களுக்கான தகவலை பரிமாறி கொள்ளுங்கள்.  தீயணைப்பு நிலையம் அல்லது காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் பொழுது எங்கிருந்து பேசுகிறோம் என்கிற லேண்ட்மார்க் சரியாக சொல்லுங்கள்.  அப்போதுதான் நாங்கள் எளிதாக வந்து உங்களை காப்பாற்ற முடியும் . மயக்கமானால்  முதலில்  மூச்சுகாற்று இருக்கிறதா என்று பாருங்கள் .சுவாசம் இருக்கிறதா என்று பாருங்கள்  . ஆபத்து காலத்தில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  https://www.youtube.com/watch?v=P3lGWB0cd8U

                               இவ்வாறு பல்வேறு முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தகவல்கள் சொல்லப்பட்டது.



பல்வேறு பணிகளுக்கு இடையில் பள்ளிக்கு வருகை தந்து சில மணி நேரங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய தீயணைப்பு நிலைய அலுவலர் :

                             தீயணைப்பு நிலைய அதிகாரி பல்வேறு பணிகளுக்கிடையில் குழுவினருடன் எங்கள் பள்ளிக்கு வந்து தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான தகவல்களை எடுத்துக் கூறியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான தகவல் ஆகும். அன்னாருடன்  வந்திருந்த குழுவினர் நல்ல முறையில் பல்வேறு தகவல்களை எங்கள் பள்ளிக்கு எடுத்து கூறினார்கள். மாணவர்களுக்கும் விரிவாக விளக்கினார். அன்னார் அவர்கள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார்கள். 

குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  வந்து சிறப்பித்தல் :

             ஓய்வு பெற்ற பிறகு எங்கள் பள்ளிக்கு குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு கொடுத்து இருந்தோம். அழைப்பை ஏற்று பல்வேறு பணிகளுக்கிடையில் குடியரசு தின விழாவில் நிகழ்விலும் கலந்து மாணவர்களை பாராட்டி சென்றார்கள். 

நன்றிகள் பல :

                பல்வேறு பணிகளுக்கு இடையில் தீயணைப்பு நிலைய அதிகாரி எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்கள் கலந்துரையாடி பல்வேறு சந்தேகங்களுக்கு பொறுமையாக மூன்றரை, நான்கு மணி நேரம் விளக்கம் அளித்ததற்காக இந்நேரத்தில் அன்னாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அன்னாருடன்  எங்களுடைய பயணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. பல்வேறு வகைகளில் எங்களுக்கு நல்ல விவரங்களை எடுத்துக் கூறி அதிகாரி திரு.நாகராஜ் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,   சிவகங்கை மாவட்டம்.   

 8056240653 



 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழு நிலைய அலுவலர்  நாகராஜ்  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :
 https://kalviyeselvam.blogspot.com/2019/11/blog-post_76.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/10/blog-post_20.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2018/11/blog-post_26.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2018/11/blog-post.html#more

https://kalviyeselvam.blogspot.com/2020/01/blog-post_25.html#more 

 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழு நிலைய அலுவலர்  நாகராஜ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :

https://www.youtube.com/watch?v=w9ULL9oOmhc

https://www.youtube.com/watch?v=tI6_G5ezYi4

https://www.youtube.com/watch?v=qxBN0EWKq8k

 https://www.youtube.com/watch?v=JIObUxQ5dzE











No comments:

Post a Comment