Saturday 18 August 2018

திருஈங்கோய்மலை ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருஈங்கோய்மலை ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
                                       விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற திருஈங்கோய்மலை  ஒப்புவிக்கும் போட்டியில் பங்கு பெற்ற கிஷோர்குமார் ,ஈஸ்வரன்,மாதரசி,காயத்ரி,கார்த்திகேயன், ,சக்திவேல்,முத்தய்யன் ,வெங்கட்ராமன், உட்பட 20 மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ,போட்டிகளை நடத்திய முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலர்  ஆதி ரெத்தினதிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி  நன்றி கூறினார்.
                     
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருஈங்கோய்மலை ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment