Thursday 23 August 2018

  எளிமையான முறையில் தமிழ் எழுத ,வாசிக்க பயிற்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான  எளிமையான முறையில் தமிழ் எழுத ,வாசிக்க பயிற்சி நடைபெற உள்ளது.


                         இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது : எங்கள் பள்ளியில் நாளை (25/08/2018) காலை 10 மணிக்கு தமிழ் பயிற்சியாளர் மு.கனகலெட்சுமி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி அளிக்க உள்ளார்.இப்பயிற்சியானது முற்றிலும் இலவசம்.தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.எளிய முறையில் கணிதம் மற்றும் வாய்ப்பாடு கற்பிக்க வைப்பது எப்படி என்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.வெளியூரில் இருந்து வருபவர்கள் தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வருவதற்கு தேவகோட்டை  பேருந்து நிலையத்தில் இறங்கி நகர சிவன்கோவில் அல்லது கந்தசஷ்டி மண்டபம் என்கிற இடத்தை குறிப்பிட்டு கேட்டால் (பேருந்து நிறுத்தம் : சிவன்கோவில் முக்கு ) அதன் அருகில் தான் பள்ளி உள்ளது என்கிற தகவலையும் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு தலைமை ஆசிரியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.



 
 இன்றைய நிகழ்ச்சி (25/08/2018)

மாணவர்களை எளிதாக தமிழ் எழுத ,வாசிக்க வைப்பது எப்படி ? 

எளிய முறையில் கணிதம் மற்றும் வாய்ப்பாடு கற்பிக்க வைப்பது எப்படி ?
ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.
 
பயிற்சி அளிப்பவர் : முனைவர் மு.கனகலெட்சுமி ,ஆசிரியை,தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்,சென்னை.

பயிற்சி நடைபெறும் இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம்.
நாள் : 25/08/2018
நேரம் : காலை 10 மணி .

பயிற்சி நேரம் : காலை 10 மணி முதல் 1.00 மணிவரை மட்டுமே

தலைமை : ஆர்.லெட்சுமி தேவி , வட்டார கல்வி அலுவலர்,தேவகோட்டை.

முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,
பயிற்சி முற்றிலும் இலவசம் .
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.வருகையை தெரியப்படுத்த 8056240653 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் நலம்.நன்றி.

வெளியூரில் இருந்து வருபவர்கள் தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வருவதற்கு தேவகோட்டை  பேருந்து நிலையத்தில் இறங்கி நகர சிவன்கோவில் அல்லது கந்தசஷ்டி மண்டபம் (பேருந்து நிறுத்தம் சிவன்கோவில் முக்கு )என்கிற இடத்தை குறிப்பிட்டு கேட்டால் அதன் அருகில் தான் பள்ளி.

No comments:

Post a Comment