Friday 9 October 2015

                              பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா 

தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துதல்

                                தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தீயினால் பாதிக்கப்பட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதிக்கு சென்று பகிர்தலில் மனமகிழ்வு வார விழா கொண்டாடினர்.



           தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிசார்பில் பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் பள்ளிகளில் பகிர்தலில் மனமகிழ்வு வார விழா கொண்டாட உத்தரவிடப்பட்டது.அதன்  அடிப்படையில்  தேவகோட்டை தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி  செய்யும் நோக்கிலும், இழந்ததை எண்ணி வருத்தப்படாமல் இருக்கும் விதமாகவும் தொட்டிய நாயக்கர் சமுதயாம் வாழும் பகுதியில் இந்நிகழ்வை நடத்தினார்கள்.
                                  விழாவின் தொடக்கமாக ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள்  பாண்டியன்,முருகன் ,குமார் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவ,மாணவியர் சண்முகம் ,ஈஸ்வரன்,பிரவீனா ,தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன் ,ஜீவா,பரத்குமார் ஆகியோர் சுனாமியில் இருந்து மீண்டு வருவது போன்ற விழிப்புணர்வு  நாடகம் நடித்து காண்பித்தனர்.தன்னம்பிக்கை தருவது போன்று மாணவிக பானை வைத்து  நடனம் ஆடினார்கள்.இப் பள்ளியில் பயிலும் தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதியை சார்ந்த மாணவர்கள் வாசுகி,முத்தழகி,ரஞ்சித்,வசந்தகுமார் ஆகியோரும் நடித்து காண்பித்தனர்.அடுத்தவர்களுக்கு ஆபத்து காலத்தில் ஆதரவு தந்து உதவுவது குறித்தும்,இயற்கையின் சீற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் துயரத்தையும்,அந்த துயரத்தில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்து இருந்தார்.இப் பள்ளி மாணவ,மாணவியரால் இச்சமுதாய குழந்தைகளுக்கு ரொட்டி பாக்கெட் வழங்கப்பட்டது.விழாவின் நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பகிர்தலில் மன மகிழ்வு வாரவிழாவினை முன்னிட்டு தீயினால் பாதிக்கப்பட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதியில் நாடகம் நடத்தி தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்கள்.
                                   .

No comments:

Post a Comment