Saturday 31 October 2015

                                        தேசிய ஒருமைப்பாட்டு தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.


                                  சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி கீர்த்தியா வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் சிறப்புரை வழங்கி பேசுகையில் ,வல்லபாய் படேல் இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்று இணைத்து அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக சேர்த்தார்.இந்தியா என்ற மிகபெரிய நாடு உருவாக அவரது உழைப்பு அதிகம்.தலைமை பண்புக்கு மிகப்பெரிய உதாரணம் அவர்தான்.மாணவர்களாகிய நீங்களும் அவர் போல தலைமை பண்புக்கு தயாராகி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று பேசினார்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி செய்திருந்தார்.

பட விளக்கம் : தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் நிகழ்ச்சியில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் பேசினார்.

No comments:

Post a Comment