Sunday 4 October 2015


எல் . ஐ.சி .போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா 

                                     தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு   பாராட்டு விழ நடை பெற்றது.


                                                எல்.ஐ.சி யின் 59வது காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 3வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஓவிய போட்டியும்,6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  கட்டுரை போட்டியும் எல்.ஐ.சி.அலுவலகத்தில் நடைபெற்றது.போட்டிகளில்  இப்பள்ளி மாணவ ,மாணவியர் பங்கேற்றனர்.போட்டிகளில் இப்பள்ளி மாணவ,மாணவியர் ஓவியம் வரைதலில்  4ம் வகுப்பு மாணவர் ஐயப்பன் மற்றும் கட்டுரை போட்டியில் உமா மகேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.பள்ளியில் பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . மாணவர் யோகேஸ்வரன் வரவேற்றார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பங்கேற்ற மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ மீனாள் செய்திருந்தார்.மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்.

No comments:

Post a Comment