Monday 19 October 2015

எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.



                                                              விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார்.1ம் வகுப்பு திவ்ய ஸ்ரீ ,2ம் வகுப்பு அம்மு ஸ்ரீ ,3ம் வகுப்பு கிஷோர்குமார்,4ம் வகுப்பு அய்யப்பன்,கிருத்திகா  ,5ம் வகுப்பு கார்த்திகேயன், 6ம் வகுப்பு உமா மகேஸ்வரி ,7ம் வகுப்பு தனலெட்சுமி,பரமேஸ்வரி ,8ம் வகுப்பு தனம் ஆகிய 10 மாணவர்களுக்கு விருதுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

 

No comments:

Post a Comment