Saturday 18 October 2014


பள்ளிகளுக்கு விடுமுறை குழப்பம் தீருமா?

பருவமழையின் போது, கனமழை பெய்தால், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். சில ஆண்டுகள் முன் வரை, கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்; பின் இதற்கான அதிகாரம், மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டது. தற்போது, பருவமழை தீவிரமடைந்து, கனமழை கொட்டி வருகிறது. எனவே, வானிலை அதிகாரிகளின் ஆலோசனையை முதல் நாளே பெற்று, விடுமுறை அறிவிப்பையும், முதல் நாள் இரவே வெளியிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, ''வழக்கம்போல், அந்தந்த உள்ளூர் நிலைமையை கருத்தில்கொண்டு, மாவட்ட கலெக்டர்களே, முடிவெடுத்து அறிவிப்பர்,'' என்றார்.

No comments:

Post a Comment