தேர்வு வாரியம் முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை
ஆசிரியர்
தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும்
போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஆண்டுக்கான தகுதித்
தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு
வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில்
அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி
தேர்ச்சி பெற வேண்டும் என்று
கடந்த
2010ம் ஆண்டு அரசு
உத்தரவிட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி
ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு
நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்தது.
இதுவரை
3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில்
போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம்
ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது.
இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது. ஒவ்வொரு
முறை தகுதித் தேர்வு நடந்து
முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான
நாளில் இருந்தே தேர்வு எழுதியோர்
தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து வந்துள்ளனர்.
அந்த வழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில்
ஆசிரியர் தேர்வு வாரியம் பல
பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த
தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை
கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து
பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த
வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வெயிட்டேஜ்
முறையை ரத்து செய்து விட்டு
பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன்
கூடிய வெயிட்டேஜ் முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித் தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment