Sunday 3 July 2022

சதுரங்க விழிப்புணர்வு 







 

 தேவகோட்டை -ஜூலை  - தமிழக அரசு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
                             

              சர்வேதச அளவில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடையே காலை வழிபாட்டு கூட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை பள்ளி   தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக விளக்கினார்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா சதுரங்கம் விளையாட்டில் காயின்களை அறிமுப்படுத்தினார் .ஆசிரியர் ஸ்ரீதர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

பட விளக்கம்:  தமிழக அரசு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா செஸ் காயின்களை அறிமுகப்படுத்தினார்.
 
 
வீடியோ : 
 
https://www.youtube.com/watch?v=DHcRxffdXyM
 

 

No comments:

Post a Comment