விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி 53 ராக்கெட் வெற்றிக்கு
பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு
வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புவி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.
சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்
விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது .
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இந்த ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது.
இது ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் பூமியை வண்ணப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும், பேரிடர் மீட்புக்குத் தேவையான மனித வளங்களை கண்டறியும் பணிகளையும் மேற்கொள்ளும்.என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.
இந்த
சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப
ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு
வண்ண பலூன் பறக்க
விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்
வீடியோ :
https://www.youtube.com/watch?v=_HxVcsAvXZ8
No comments:
Post a Comment