கல்வி வளர்ச்சி நாள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு
கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை
சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாணவர்கள் ஓவியங்கள் வரைந்தும் , கவிதை கூறியும் ,அவரது புகழை பேசியும் கொண்டாடினார்கள்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது .
வீடியோ :
https://www.youtube.com/watch?v=OFuDpd3D41c
No comments:
Post a Comment