Sunday 5 June 2022

 உலக சுற்று சூழல் தினம் - மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள் 


ஓவியங்கள் வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று   விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 












 
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு   உலக சுற்று சூழல்   தினத்தை முன்னிட்டு ஓவியம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
 
           பள்ளி  மாணவர்களுக்கு இணையம் வழியாக  உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் உயிர் வளி தரும் மரத்துக்கு மரண வலி தராதே - அது கொடுஞ்செயல் மற்றும்  இலவசம் ,இலவசம் என்றால் வாயை பிளக்கிறாய் , மனிதா  நான் தரும் இலவசத்தை ஏனோ வாங்க மறுக்கிறாய் - இயற்கை என்று இயற்கையை காக்க  இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ஓவியங்கள் வரைந்து   அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர்.
 
 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,செல்வமீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.
 
வீடியோ ;
 

https://www.youtube.com/watch?v=MA-P5lGbOJ8

https://www.youtube.com/watch?v=IEthEXpkcsc

No comments:

Post a Comment