இணையம் வழியாக பஞ்சபுராண பாடல் போட்டிகள்
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு
,அபிராமி அந்தாதி ,திருப்புகழ் பாடல்களை மொபைல் வழியாக பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் திருமுறை ஓதுதல் பயிற்சி போட்டிகளில் இணையம் வழியாக பங்குபெற்றனர்.
பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை நிருவாகி சரவணன், முன்னாள் துணை ஆட்சியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் பட்டுக்கோட்டையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இணையம் வழியாக தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு ,அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாடும் போட்டிகளையும், பேச்சு போட்டிகளையும் நடத்தினார்கள்.இதனில் இப்பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆர்வத்துடன் பங்குபெற்றனர். மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற தலைமை ஆசிரியர் ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் செல்வமீனாள்,முத்துலெட்சுமி, ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை இணையம் வழியாக நடத்திய திருமுறை ஓதுதல் பயிற்சி போட்டிகளில் பங்குபெற்றனர்.
No comments:
Post a Comment