Monday 20 December 2021

 இளம் கவிஞருக்கு பாராட்டு 




 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி பள்ளியில் இளம்  கவிஞரை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

                        சமீபத்தில் தேவகோட்டை பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் பாரதி வாழ்கிறார் என்கிற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கவிதை வாசித்த இப்பள்ளி மாணவி ஹனிஷ்காவுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலட்சுமி, செல்வமீனாள், ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஹனீஷ்கா தேவகோட்டை பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பாரதி விழாவில் பாரதி வாழ்கிறார் என்கிற தலைப்பில் கவிதை வழங்கியதற்காக பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, செல்வமீனாள், கருப்பையா ஆகியோர் பாராட்டினார்கள்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=fkk3Pb1meZ0

No comments:

Post a Comment