திருமுறை ஓதுதல் பயிற்சி
சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை ஏற்பாடு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஓதுதல் பயிற்சி நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை நிருவாகி சரவணன் மாணவர்களுக்கு தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு ,அபிராமி அந்தாதி ஆகியவற்றை பாடுவதற்கு பயிற்சி அளித்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர் . ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஓதுதல் பயிற்சி நடைபெற்றது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=uZNxfI7KfEs
No comments:
Post a Comment