வளரிளம் பெண்களுக்கு தொற்றா நோய் , மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு
தண்ணீர் போதிய அளவு பருகுங்கள்
மருத்துவர் வேண்டுகோள்
தேவகோட்டை
- பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என
மருத்துவ கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் தொற்றா நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில்
6,7,8ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான
பிரச்சினைகள் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து
கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள்
வழங்கப்பட்டன.பள்ளி ஆசிரியை செல்வமீனாள் அனைவரையும்
வரவேற்றார்.கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
வகித்தார்.சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப
சுகாதார நிலைய மூத்த செவிலியர் ஷீலா முன்னிலை
வகித்தார். அரசு பொது மருத்துவர் (ஓய்வு ) மீனாள் பெண்களின் உடல் நல பிரச்சனைகள்
குறித்து விளக்கமளித்து பேசுகையில்,மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை
மிட்டாய்,பொறி உருண்டை ,பழங்கள்,கீரை வகைகள்,காய்கறிகளை சாப்பிட
வேண்டும்.மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றார்.நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பொதுவாக நாம் மருத்துவரை சென்று பார்த்தால் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இயலும்.அதற்குள் நமக்கு சீட்டை எழுதி கொடுத்து விடுவார்கள்.மீண்டும் சந்தேகம் கேட்கலாம் என எண்ணி சென்றோமானால் அவ்வளவு எளிதாக நாம் மருத்துவரை பார்க்கமுடியாது.ஆனால் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாணவிகள்,அவர்களின் அம்மாக்கள் ,பெண் ஆசிரியைகள் ஆகியோர் விளக்கமாக இந்த நிகழ்வில் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள பள்ளியின் வழியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்டு சந்தேகங்களை விளக்கி சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இந்த பணியை செய்து உதவி வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியது ஆகும்.
இம்முகாமில்
பள்ளி வயது மாணவிகள் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம்,அந்த மூன்று நாட்கள்
தொடர்பான விளக்கங்கள்,மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு
விளக்கங்கள்,மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை
போக்கவும்,மாணவிகளின் அம்மாக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும் இந்த
ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
அரசு மருத்துவர் (ஓய்வு ) மீனாள் , செவிலியர் ஷீலா ஆகியோர் மாணவிகளுக்கு தொற்றா
நோய் குறித்தும்,மாதவிடாய் தொடர்பாகவும் விளக்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=tAnq9px22D8
மேலும் விரிவாக :
*மூளை வளர்ச்சி குறைவில்லாத குழந்தை பிறக்க தமிழக அரசு மருத்துவ மனைகளில் வழங்கும்
நிச்சயதார்த்த மாத்திரை சாப்பிடுங்கள்
ஆண்களும் தன்சுத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்
*மாதவிடாய் ஒரு நோயல்ல - இயற்கையானது
*கோழி இறகை கொண்டு காது குடையாதீர்கள்
*தீட்டு என்று மூலையில் தள்ளி வைப்பது தவறு
*மாத விடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
*பிராய்லர் கறி கோழி உண்பதால் பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
*மருத்தவ கருத்தரங்கில் தகவல்
*தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில்
பள்ளி வயது மாணவிகள் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம்,அந்த மூன்று நாட்கள்
தொடர்பான விளக்கங்கள்,மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு
விளக்கங்கள்,மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை
போக்கவும்,மாணவிகளின் அம்மாக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும் இந்த
ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாத விடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும்,மனதும் வேறுபட்டு காணப்படும்.பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறர் நம்மை தொடுவதில் நல்ல தொடுதல்,கேட்ட தொடுதல் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.உறவினர்கள் யாரேனும் தவறான தொடுதல் செய்தால் அதனை ஆசிரியரிடமோ அல்லது அம்மாவிடமோ அவசியம் சொல்ல வேண்டும்.பெண்கள் பருவமடையும்போது சில உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும்.உடலில் சில இடங்களில் உரோமங்கள் அதிகமாகும்.இவற்றை கண்டு பயம் வேண்டாம்.இது தானாக இயற்கையில் வளர்ச்சி அடையும்போது நடைபெறுபவை ஆகும்.இதற்காக பயம் வேண்டாம்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தேவையில்லாத சிந்தனைகள் ,தலைவலி வரலாம்.யாரை பார்த்தாலும் கோபம் கூட சமயங்களில் அதிகமாக வரலாம்.கெட்ட எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது போன்ற சமயங்களில் தண்ணீர் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் நலம் ஓரளவு உங்கள் கட்டுக்குள் வரும்.தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம்.
பிராய்லர் கறி கோழி உண்பதால் பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
படர் தாமரை நோய் வர காரணம் என்ன ?
No comments:
Post a Comment