Saturday 28 March 2020

*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*

_*✍️⚡கடன் தவணைத் தொகைகளை 3 மாதங்கள் தள்ளி  கட்ட SBI அனுமதி*_




கடன்களுக்கான வட்டி விகிதத்தை முக்கால் சதவீதம் அளவுக்கு குறைத்துள்ள எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்கள் கடனுக்கான தவணைத் தொகைகளை 3 மாதங்கள் தள்ளி  கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது.

ரெப்போ எனப்படும், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் விகிதத்தை முக்கால் சதவீதமும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் தொகைகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஒரு சதவீதமும் குறைந்து ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.

இதேபோல, வங்கிகள், நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெற்ற அனைத்து வகைக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்கவும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.

இதன் பயன்களை எஸ்பிஐ வங்கி உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

 இதன் மூலம், ஏப்ரல் 1 முதல், 30 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி 7.95 சதவீதமாகக் குறையும்.

இதேபோல டெபாசிட்டுகளுக்கான வட்டி அரை சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கடனுக்கான தவணைத் தொகைகளை 3 மாதங்கள் கழித்து கட்டவும் எஸ்பிஐ அனுமதி வழங்கும் என அதன் தலைவர் ரஜ்னீஷ் (Rajnish Kumar) தெரிவித்துள்ளார்.


┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈

No comments:

Post a Comment