Friday 6 March 2020

 உலக மகளிர் தினம் 



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
                                                                        மாணவி சந்தியா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மகளிர் தினம் தொடர்பாக பேசினார்கள்.பெண்கள் சுதந்திரம் மற்றும் பெருமைகள் குறித்து பேசிய மாணவிகள்  நதியா,கீர்த்தியா,ஜனஸ்ரீ ,மெர்சி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக மாணவி திவ்யஸ்ரீ நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் நதியா,கீர்த்தியா,ஜனஸ்ரீ ,மெர்சி ஆகியோருக்கு ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி பரிசுகளை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment