Monday 30 March 2020

பழக இனிமையானவருக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் !

அகில இந்திய வானொலியின் நேயர்கள் விரும்பும் ஆளுமைக்கு இன்று பணி நிறைவு நாள் ! நீடூழி வாழ அனைத்து செல்வங்களும் பெற்று உங்கள் குடும்பம் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா ! 







                         நண்பர்களேஅய்யா  பொன். தனபாலன்அவர்கள் கொடைக்கானல்  பண்பலை வானொலியில்  பணியாற்றியபோது நிகழ்ச்சி தயாரிப்பாளர்  அய்யா  பொன். தனபாலன் அவர்களுடன் இனிமையான பழக்கம் ஏற்பட்டது . நேயர்களிடமும்,ஆளுமைகளிடமும் அன்னாரின்  கலந்துரையாடலும் , அன்பாக பேசும் தன்மையும் மறக்க முடியாத நிகழ்வுகள் . கேட்க,கேட்க ஆர்வத்தை ஏற்படுத்தும்.அதிகம் தொலைக்காட்சிகள் இடம் பிடிக்காத காலங்களில் கோடை பண்பலையில் மாமா,மாப்பிளை என்று தெறிக்கவிடும் கலந்துரையாடலுடன் அன்னாரின் குரல் மிக அருமை.வானொலியில் பல நாட்கள் அவருடைய தகவல்களை தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன் .மிகவும் இனிமையாகவும், விவசாயம் தொடர்பாக பல்வேறு தகவல்களை எடுத்து கூறுவதிலும் வல்லவராக இருந்துள்ளார்.


                              நான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு அய்யா  அவர்கள் குழுவுடன் கொடைக்கானலில் இருந்து வந்து ஒரு நாள் முழுவதும் எங்கள் பள்ளியில் இருந்து மழலையர்  நிகழ்ச்சிக்காக பல இளம் மாணவர்களை பேட்டி எடுத்து மிக அழகாக அதனை ஒளிபரப்பினார்கள். அது மறக்க முடியாத அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. அன்னார்  பேசும் போதும், பழகும் போதும் இனிமையாக பேசிப் பழகுவார்கள் .பிறகு கொடைக்கானலில் இருந்து அன்னார்  மதுரைவானொலி  நிலையத்திற்கு வந்த பிறகு நாற்றங்கால் பிரிவில் பணியாற்றுகையில்  சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக எங்கள் பள்ளி மாணவர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கி உதவியாக இருந்தார்கள். வானொலி நிலையத்திற்கு சென்ற பொழுதும், செல்வதற்கு முன்பாக தொலைபேசியில் அழைத்து பல்வேறு தகவல்களை கேட்கும்போதும் மிகவும் இனிமையாக அன்புடன் எங்களுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி நல்ல முறையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறி எங்களுக்கு ஆதரவு தந்தார்கள்.அய்யா  அவர்கள் 32 வருடம் அகில இந்திய வானொலியிலும், எட்டு ஆண்டுகள் விவசாய துறையிலும் பணியாற்றி 31/ 3/ 2020 ஆகிய இன்று பணி நிறைவு பெறுகிறார்கள். கோயமுத்தூர், ஊட்டி, மதுரை ,கொடைக்கானல் ஆந்திரப் பிரதேசத்தில் கடப்பா ஆகிய இடங்களில் பணியாற்றி மிகவும் பேரும் பெருமையும் பெற்று பல நூறு ஆளுமைகளை வானொலி நிலையத்திலும் வெளி பகுதிகளிலும் பேட்டி எடுத்து இன்றுடன் அவர்கள் பணி நிறைவு பெறுகிறார்கள் .அன்னாரது வாழ்க்கை பணிநிறைவுக்கு பின்பும் மிக நல்ல விதமாக அமையவும்,இவ்வளவு பெருமைகளை அடைய அவருக்கு உதவியாக இருந்த அன்னாரது இல்லத்தரசிக்கும்,குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து எல்லாம் வல்ல இறைவன் அனைத்து பேறுகளையும் வழங்க பிரார்த்திக்கின்றேன். 

 அன்பான வாழ்த்துக்களுடன் ,

லெ . சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,
தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்



No comments:

Post a Comment