Tuesday 7 May 2019

வரலாற்று நாயகர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வரலாற்று நாயகர் விருது பெற்றததற்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
                                           புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில்  புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் வரலாற்று நாயகர் விருதினை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு  ஊடகவியலாளரும் , புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளருமான   கார்த்திகை செல்வன் மற்றும் புதுகை வரலாறு செய்தி ஆசிரியர் சிவசக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பட விளக்கம் : புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில்  புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் வரலாற்று நாயகர் விருதினை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு  ஊடகவியலாளரும் , புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளருமான   கார்த்திகை செல்வன் மற்றும் புதுகை வரலாறு செய்தி ஆசிரியர் சிவசக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment