Sunday 5 May 2019

வாகை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 
    


                                                      
கோடைகால  விடுமுறை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடைகால விடுமுறையில்   சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
                                           விசாலயன்கோட்டை  சேதுபாஸ்கரா வேளாண்மை ஆராய்ச்சி கல்லுரியில் நடைபெற்ற வாகை பயிற்சி முகாமில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஐயப்பன்,சிரேகா இருவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியை முத்தமீனாள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.வாகை பயிற்சி முகாமில் விளையாட்டு,விவசாயம்,நாடகம் தொடர்பாக 15 நாட்கள் பயிற்சி நடைபெற்றது.இம்முகாமில் இப்பள்ளி மாணவர்கள்   பங்குபெற ஏற்பாடு செய்து கொடுத்த சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.வாகை பயிற்சி முகாமில் அரசு பள்ளிகளில் இருந்து இப்பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சி முகாமில் கற்று கொண்ட விஷயங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

படவிளக்கம் :விசாலயன்கோட்டை  சேதுபாஸ்கரா வேளாண்மை ஆராய்ச்சி கல்லுரியில் நடைபெற்ற வாகை பயிற்சி முகாமில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஐயப்பன்,சிரேகா இருவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.


No comments:

Post a Comment