Sunday 14 October 2018

இளைஞர் எழுச்சி நாள் 


அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்து அசத்திய மாணவி
 மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.




                                                     நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சபரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி ,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.அப்துல் காலம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எடுத்து சொல்லப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் காயத்ரி,மாதரசி,பாலசிங்கம் ஆகியோருக்கும் ,அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்த மாணவி ராஜேஸ்வரிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்து இருந்தார்.விழாவின் நிறைவாக மாணவி  பாக்யலட்சுமி  நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அப்துல் காலம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்த மாணவி ராஜேஸ்வரிக்கும் பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.

No comments:

Post a Comment