Tuesday 2 October 2018

விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  வழங்கும் விழா
 
விடுமுறைக்கு பின்பு பள்ளி மீண்டும் திறப்பு
 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விடுமுறை முடிந்து பள்ளி திறந்த உடன் மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் கருப்பையா  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார் .பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வைதேகி மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கினார் .நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவ,மாணவியர்க்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வைதேகி விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கினார்.

No comments:

Post a Comment