Wednesday 19 September 2018

        மாணவர்களுக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுள் காப்பீட்டு ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



                                                  நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி மாணவ துணை தலைவர் ஐயப்பன் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி ஆயுள் காப்பீட்டு 62வது ஆண்டு வார விழா போட்டியில் பங்கேற்ற  மாணவர்களுக்கும்,நான்காம் வகுப்பில் முதல் பரிசு பெற்ற மாணவர் சந்தோசுக்கும் பரிசுகளை வழங்கி பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.நிறைவாக மாணவ தலைவர் காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுள் காப்பீட்டு ஓவிய போட்டியில் பங்கு கொண்டு  பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment