Thursday 15 February 2018

மாணவர்களுக்கு பாராட்டு 

வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

முதல் பரிசினை ஐந்து  பேர் பெற்று சாதனை 





                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வாரவழிபாட்டில் பரிசுகள் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

     விழாவில் ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.    தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெறும்  வாரவழிபாட்டுக் கூட்டத்தில்  பங்கேற்று தொடர்ந்து 47 வாரங்களுக்கு மேல் சென்று இப்பள்ளி மாணவர்கள் தனுதர்ஷினி,ஜனஸ்ரீ ,நாகமணிகண்டன்,ரிஷி செல்வா,வெங்கட்ராமன் ஆகிய ஐந்து பேரும்  முதல் பரிசு பெற்றனர்.இவர்களுடன் மொத்தம்   16 மாணவர்கள்  பரிசுகள் பெற்று சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக பள்ளி ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.


 பட விளக்கம் :   தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற சாதனை செய்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பரிசு பொருள்களுடன் உள்ளனர்.










மேலும் விரிவாக :

 


வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

முதல் பரிசினை ஐந்து  பேர் பெற்று சாதனை 

மொத்தம் 16 மாணவர்கள் பரிசினை பெற்று சாதனை

                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து மூன்றாம்  ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  விழாவில் ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.    தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தொடர்ந்து பல வருடங்களாக வாரம் தோறும் வெள்ளிக்  கிழமையில் வாரவழிபாட்டுக் கூட்டம் ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் தலைமையில் நடைபெற்று வருகிறது.இதில் பஞ்சபுராணத்தில் உள்ள தேவாரம்,திருவாசகம்,திருவிசைபா,திருபல்லாங்கு,பெரியபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி,திருப்புகழ் ஆகியவை தொடர்ந்து 47 வாரங்கள் நடைபெற்றன.இதனில்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  சுமார்  24 பேர் கலந்து கொண்டனர்.வாரம் தோறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வருடம்தோறும் சிவராத்திரி அன்று பரிசுகள் வழங்கி உற்சாகபடுத்தி வருகின்றனர்.இந்த வருடம் 16 மாணவர்கள் தொடர்ந்து அதிகமான வாரங்கள் சென்றதற்காக பரிசுகள் பெற்றனர்.முதல் பரிசினை  இப்பள்ளி மாணவர்கள் தனுதர்ஷினி,ஜனஸ்ரீ ,நாகமணிகண்டன்,ரிஷி செல்வா,வெங்கட்ராமன் ஆகிய ஐந்து மாணவர்கள்  தொடர்ந்து இந்த வருடம் முழுவதும் அனைத்து வாரங்களும் கலந்து கொண்டதற்காக பரிசுகளை வென்றனர்.இப்பள்ளி மாணவர்கள் ரஞ்சித்,ஜெயஸ்ரீ,புகழேந்தி,முகேஷ் கண்ணன்,சஞ்சய்,முத்தையன்,ஓவியா,ஐயப்பன்,கார்த்திகேயன்,ராஜேஷ்,காவியா   ஆகியோரும்  பரிசுகளை  பெற்றனர். பரிசுகள் பெற்ற மாணவிகளுக்கும்,கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியின்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து வார வழிபாட்டினை 67 ஆண்டுகளாக நடத்தி வரும் ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து அதிக மாணவ,மாணவியர் வார வழிபாட்டு கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்று விழாவில் மாணவரிகளிடம் கேட்டுகொள்ளப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.





No comments:

Post a Comment