Monday 7 September 2015

                                          அறிவியல் பாடல் ஒப்புவித்தல் போட்டி

 தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பாடல் ஒப்புவித்தல் போட்டியும்,பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.





                                               நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி தனலெட்சுமி வரவேற்றார்.தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில் ,அறிவியல் தொடர்பாக இளம் மாணவ பருவத்திலேயே விழிப்புணர்வு பெற வேண்டும்.அப்போதுதான் வரும்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வர இயலும் என பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.அறிவியல் விழிப்புணர்வு தொடர்பான பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில்  திவ்யஸ்ரீ, கீர்த்தியா,ராஜேஷ்,கார்த்திகேயன் ,அய்யப்பன் ,ராஜேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக மாணவி தனம் கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை வாசுகி செய்திருந்தார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  அறிவியல் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்  பரிசு வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment