Tuesday 22 September 2015

 புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 



 

                புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை (சிவகங்கையில் ) நடை பெற்ற போட்டியில் தேவகோட்டையில் இருந்து கலந்து கொண்ட ஒரே பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே.மேலும் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரை இப்போட்டியில் ஒற்றை இலக்க அளவிலான பள்ளிகளே பங்கேற்ற நிலையில் அதனில் ஒரு பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 6.30 மணிக்கே கிளம்பி சிவகங்கை சென்று போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளையும் ,உடன் ஊக்கபடுத்தி அழைத்து சென்ற முத்து மீனாள் ஆசிரியையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை,ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment